ஈரோட்டில் வெல்லப்போவது யார்? அதிமுக ஆற்றல் அசோக்குமாரா.. திமுகவா? தந்தி டிவி பரபர சர்வே ரிசல்ட்
சென்னை: ஈரோடு லோக்சபா தொகுதியில் அதிமுக -திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு லோக்சபா தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? என்பது குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளது. அது பற்றி இங்கே பார்க்கலாம்.
ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் கேஇ பிரகாஷ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பி விஜயகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகன் போட்டியிடுகிறார்.
தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி திமுக வேட்பாளர் அதிக வாக்கு சதவிகிதம் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது திமுகவிற்கு 41 சதவிகிதம் முதல் 47 சதவிகிதம் வரையும், அதிமுகவிற்கு 38 சதவிகிதம் முதல் 44 சதவிகிதம் வரையும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவிகிதம் முதல் 11 சதவிகிதம் வரையும், நாம் தமிழர் கட்சிக்கு 6 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரையும் மற்ற கட்சிகளுக்கு 1 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரையும் வாக்குகள் கிடக்கலாம் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள்:
திமுக - 41 - 47 சதவிகிதம்
அதிமுக - 38 - 44 சதவிகிதம்
பாஜக - 5 - 11 சதவிகிதம்
நாம் தமிழர் கட்சி - 6 - 9 சதவிகிதம்.












Click it and Unblock the Notifications