பனையூரில் என்ன நடந்தது.. ஏன் கதவை பூட்டினார் விஜய்... வெளியான பரபர தகவல்!
ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் விஜய்
சென்னை: விஜய்யின் பண்ணை வீட்டு கதவு நேற்று அடைக்கப்பட்ட நிலையில், நேற்றைய ஆலோசனை கூட்டம் ஏன் ரத்தானது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
நேற்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச உள்ளதாக சொல்லப்பட்டது.. வழக்கமாக பனையூரில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில்தான் நிர்வாகிகளை சந்தித்து பேசுவது வழக்கம்..
அதன்படியே நேற்றும் திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேச போவதாக தகவல் வெளியானது.
காலை 11 மணிக்கே ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியை கடந்தும் விஜய் அங்கு வராமல் இருந்தார்.. எப்படியும் மதியத்துக்கு மேல் வந்துவிடுவார் என்பதால், நிர்வாகிகளும், ரசிகர்களும் அங்கே திரண்டு காத்திருந்தனர்.. ஆனால், ஆலோசனை கூட்டம் ரத்து என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு என்ன காரணம் என்று தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஷயம் இதுதான்:
புதிதாக கட்சி தொடங்கி உள்ள எஸ்ஏ சந்திரசேகரன், விஜய் ரசிகர் மன்றத்தை கட்டுப்பாட்டில் புஸ்ஸி வைத்திருக்கிறார் என்றுகூறியதுடன், பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக சொல்லி வருகிறார்.. கிரிமினல்களின் பிடியில் தன் மகன் சிக்கிஉள்ளார், இது விஜய்க்கே தெரியாது என்றும் புஸ்ஸியை தாக்கி பேசி வருகிறார்.

பனையூர்
அதனால்தான் மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் 50 பேரை அழைத்து முதல்கட்டமாக இது சம்பந்தமாக ரகசியமாக ஆலோசனை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளார்.. அதற்காகவே தன்னுடைய பனையூர் பங்களாவுக்கும் வரசொல்லி உள்ளார்.. அதன்படியே பொறுப்பாளர்களும் சென்றனர்.. ஆனால் இந்த விஷயம் எப்படியோ மீடியாவுக்கு தெரிந்துவிட்டது.

சாப்பாடு
அதனால் செய்தியாளர்கள் பண்ணை வீட்டிற்கு திரண்டு வந்துவிட்டனர்.. மீடியா வருவதை கண்டதுமே பண்ணை வீட்டு கதவுகள் காலையில் 10 மணிக்கே மூடப்பட்டுவிட்டதாம்.. 10 மணிக்கு மேல் வந்த நிர்வாகிகளும் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.. அதேசமயம் விஜய்யும் அங்கு வரவே இல்லை.. நாளெல்லாம் நிர்வாகிகள் காத்திருந்தனர்.. மதிய சாப்பாடும் வெளியே இருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு, அங்கேயே விஜய்க்காக காத்திருந்தனர்.

மோதல்
சாயங்காலம் ஆகியும் விஜய் வரவே இல்லை.. பிறகுதான் ஆலோசனை கூட்டம் ரத்து என்ற தகவல் அவர்களிடம் சொல்லப்பட்டுள்ளது.. இதற்கு காரணம் மீடியாதான்.. ரகசியமாக தன்னுடைய நிர்வாகிகளிடம் மனம்விட்டு விஜய் பேச இருந்த நிலையில், மீடியாவுக்கு தகவல் பறந்துவிட்டதாலேயே கூட்டம் ரத்து என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. இது ஒரு பக்கம் இருந்தாலும், அப்பா - மகன் இடையே அரசியல் மோதல் விஸ்வரூபமெடுத்துவருவதுதான் இதன்மூலமும் தெரியவருகிறது.

ரசிகர்கள்
மற்றொரு பக்கம், விஜய்யின் ரசிகர்களை தன்னுடைய கட்சிக்கு வாருங்கள், எல்லாருக்கும் நல்ல பதவி தருகிறேன் என்று ஆசைவார்த்தையும் காட்டி வருகிறாராம் எஸ்ஏசி. இந்த விஷயம்தான் விஜய்க்கு தெரிந்துள்ளது.. எக்காரணத்தை கொண்டும், ஒரு ரசிகர் கூட தன் அப்பாவின் கட்சி பக்கம் போய்விடக்கூடாது என்பதற்காக ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்ய விரும்பி உள்ளார்.
-
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications