ராதிகாவுக்கு ஏன் கொடுக்கல.. மேடையிலேயே அப்செட்டான சரத்குமார்.. எதற்காக தெரியுமா?
சென்னை: சிறந்த நடிகை என்று சொன்னால், இந்திய திரைத்துறையில் என் மனைவி தான் சிறந்த நடிகைகளில் ஒருவர், ஆனால் அவருக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை? என்று நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகர் சரத்குமார் குடும்பத்தில், சரத்குமார், நடிகை, ராதிகா, நடிகை வரலட்சுமி ஆகியோர் திரைத்துறையில் வேறவெலலில் கலக்கி வருகிறார்கள். நடிகை ராதிகா தற்போது குணச்சித்திர வேடங்களில், அம்மா உள்ளிட்ட வேடங்களில் நடித்து வருகிறார். பல வருடங்களாக நடித்து வரும் ராதிகாவிற்கு இதுவரை சிறந்த நடிகைக்கான தேசிய விருது தரவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவருக்கு விருது தராதது குறித்து நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகர் சரத்குமார் திரைப்பட விழா ஒன்றில் பேசுகையில், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சரத்குமார் கூறுகையில், ஒரு காலக்கட்டத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதாபாத்திரம் அமையும் போது, அதை மற்றொரு விஷயத்துடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. நான் இந்த மேடையிலேயே சொல்கிறேன்.
இன்றைக்கு இருக்கிற கதாநாயகிகளில் சிறந்த நடிகை என்று சொன்னால் அது என் மனைவி ராதிகா தான். ராதிகா தான் இந்திய சினிமா துறையில் ஒரு தலை சிறந்த நடிகைகளில் ஒருவர் ஆவார். ஆனால் இன்று வரை அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது தரப்படவில்லை, ஏன் என்று கேட்கிறேன்.
வரலட்சுமியை பற்றி சொல்வதென்றால், அவர் தன்னை தயார் செய்து கொண்டார். கிரியேட்டிவ்வாக வித்தியாசமான பாதையில் பயணிக்கிறார், அது நிந்தரமாக இருக்கும் என்று தனது பாதையை தேர்வு செய்துள்ளார். சினிமாவை முழுமையாக படித்துவிட்டு நடித்துக்கொண்டிருக்கிறார் வரலட்சுமி. நான், ராதிகா, வரலட்சுமி மூன்று பேருமே ஒருவரையொருவர் மிஞ்சிக் கொண்டு நடிக்கவில்லை. நாங்கள் எங்கள் பணியை சிறப்பாக செய்கிறோம் அவ்வளவே..
அடுத்தது வந்து வெங்கட்பிரபு மற்றும் அரவிந்த்சாமியுடன் படம் பண்ணுகிறேன். சிறந்த இயக்குனர் வெங்கட் பிரபு. என் நெருங்கிய நண்பர் அரவிந்த் சாமி. எனக்கும் ராதிகாவிற்கும் திருமணம் நடந்த போது, வாழ்த்துக்களை படித்து திருமணத்தை நடத்தி வைத்தவர் அரவிந்த் சாமி. அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து பெரிய சந்தோஷம்" இவ்வாறு சரத்குமார் கூறினார்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications