Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 3 நிமிஷம் தான்.. கோவையன்ஸ் மெட்ரோவுக்கெல்லாம் வர மாட்டாங்க! மத்திய அரசின் புது விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிக்கையை, மத்திய அரசு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இதனைக் கண்டித்து இரு நகரங்களிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை திருப்பு அனுப்ப காரணம் என்ன? என்பது குறித்து மத்திய அரசு விளக்கியுள்ளது. அதில், கோவையில் சராசரியாக 30 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் இயக்கப்படும் நிலையில் மெட்ரோவின் சராசரி வேகம் மணிக்கு 34 கிலோ மீட்டர் எனவும், ஒரு சில நிமிடங்களுக்காக மக்கள் மெட்ரோ பயணத்தை நாட மாட்டார்கள் என்பதற்காகவே திருப்பி அனுப்பியுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்ட நகரங்களான மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை அடுத்து இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்தது. மதுரையில் திருமங்கலம் ஒத்தக்கடை இடையே சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கும், கோவை அவிநாசி சாலையிலிருந்து கருமத்தம்பட்டி வரை, உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை 39 கிலோமீட்டர் தூரத்திற்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

Coimbatore Madurai Metro

கோவை மெட்ரோ

தொடர்ந்து ஆய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பியது. மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என்பதால் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகளும் மதுரை மற்றும் கோவையில் ஆய்வை முடித்தனர். இந்த நிலையில் இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திருப்பி அனுப்பி உள்ளது.

மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை

20 லட்சத்திற்கும் மேல் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், கோவையில் தற்போது 15 லட்சமும் மதுரையில் 15 லட்சம் மக்கள் தான் வசிக்கிறார்கள் என்பதால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது எனவும், இரு நகரங்களிலும் தனி பாதையில் பேருந்துகளை இயக்கலாம் அல்லது பிஆர்டிஎஸ் போன்ற திட்டத்தை செயல்படுத்தலாம் என பரிந்துரைத்தது. இதனால் தமிழக அரசு அதிர்ச்சி அடைந்த நிலையில் திமுக கூட்டணி சார்பில் கோவை மற்றும் மதுரையில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு

இந்த நிலையில் கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை திருப்பி அனுப்பியது ஏன் என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில்," கோவையில் சராசரியாக மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் வாகனங்களில் பயணப்படும் நிலையில் மெட்ரோவின் சராசரி வேகம் மணிக்கு 34 கி.மீ ஆகும். சாலையில் வாகனங்களின் சராசரி வேகம் மெட்ரோ ரயிலின் வேகத்திற்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது.

நேர சேமிப்பு

கார், பேருந்து, இரு சக்கர வாகனத்திற்கு பதில் மெட்ரோ ரயிலில் பயணித்தால் பயணியால் 3 நிமிடங்கள் வரையே சேமிக்க முடியும். குறைந்த நேர சேமிப்பு காரணமாக பயணிகள் மெட்ரோவை நாட வாய்ப்பில்லை. 2 கோவையில் 34 கி.மீ. தூர மெட்ரோ சேவையில் தினசரி 5.9 லட்சம் பயணங்கள் மேற்கொள்ள முடியும் என திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ திட்டம் கோவையில் கொண்டு வரப்பட்டால் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் அதனை நாட மாட்டார்கள்.

மக்கள் தொகை

22 மீ. அகலத்திற்கு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு திட்டத்தை முன்னெடுத்தால் பல கட்டிடங்களை இடிக்க நேரிடும். 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் மெட்ரோ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது கொள்கை. 2011 கணக்கீட்டின்படி மதுரையின் மக்கள் தொகை 15 லட்சமாக உள்ளதாக அங்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த இயலாது." என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+