முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதது ஏன்? ஓ பன்னீர்செல்வம் விளக்கம்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வர் பழனிச்சாமி லண்டனில் இருந்து புறப்பட்டு இன்று அமெரிக்காவின் நியூயார்க் சென்றடைந்தார். முன்னதாக லண்டனில் கிங்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பது குறித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதேபோல் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்திருந்த திமுக தலைவர் முக ஸ்டாலின், முதல்வரின் வெளிநாடு பயணத்தில் உள்ள மர்மம் என்ன என்று கேட்டு நீண்ட அறிக்கை வெளியிட்டு இருந்தார்..
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
எந்த பிரச்சனையாக இருந்தாலும் எதிர்மறையான கேள்விகளையும், எதிர்மறையான பதில்களையும் அளித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தில் எந்தவித மர்மமும் இல்லை என்றும் முதல்வர் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications