Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓஹோ.. ப்ளானே வேற போல.. "தலைவர்" என்றும் பாராமல்.. எடப்பாடியே இதை செய்யலாமா.. அதுக்குன்னு இப்படியா?

: பண்ருட்டி ராமச்சந்திரன் பதவியை எடப்பாடி பறிக்க காரணம் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஏன் நீக்கம் செய்தார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டிராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்!

பண்ருட்டி

பண்ருட்டி

எடப்பாடி தலைமையில் பொதுக்குழு நடந்ததற்கு முன்பும், பின்பும், பண்ருட்டியாரை தனியாக சந்தித்து பேசினார் ஓபிஎஸ்.. இதற்கு முன்பு, சசிகலாவும் பண்ருட்டியை சந்தித்து பேசியிருந்தார்.. இவர்கள் அனைவரிடமும் பண்ருட்டி சொல்லியிருந்த ஒரே கருத்து, அதிமுகவில் பிளவு கூடாது, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான்.. அதாவது பாஜக மேலிடம் வலியுறுத்தி வரும் அதே கருத்தைதான், மூத்த தலைவரான பண்ருட்டியும் சொல்லி உள்ளார்.. சொல்லியும் வருகிறார்.

 குட்டி பிளாஷ்பேக்

குட்டி பிளாஷ்பேக்

அனைவரையும் ஒன்றாக இருக்க சொன்னது ஒரு குத்தமா? இதுக்கே எடப்பாடி பழனிசாமி சீனியர் என்றும் பாராமல் பண்ருட்டியாரை தூக்கி எறிந்துவிட்டாரே என்ற கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் ஆக்கிரமித்து வருகின்றன.. இந்நிலையில், எதற்காக பண்ருட்டியை திடீரென எடப்பாடி நீக்கம் செய்தார் என்ற தகவல் கசிந்துள்ளது.. இதுக்கெல்லாம் காரணமே சி.வி.சண்முகம்தானாம். இதற்கு ஒரு குட்டி பிளாஷ்பேக் காரணமும் சொல்லப்படுகிறது.

 வன்மம் மோதல்

வன்மம் மோதல்

சிவி சண்முகத்தின் வலியுறுத்தலின் படி இந்த நீக்கத்தை எடப்பாடி செய்ததாக சொல்கிறார்கள்.. அதாவது, பண்ருட்டிக்கும் சி.வி.சண்முகத்தின் அப்பாவுக்கும், எம்ஜிஆர் காலத்திலிருந்தே மோதல்கள் இருந்தது. சண்முகத்தின் தந்தைக்கு எதிராக எம்ஜிஆரிடம் பல்வேறு புகார்களைத் தெரிவித்தவர் பண்ருட்டியார். இவரது வலியுறுத்தலின் பேரில் சண்முகத்தின் தந்தையை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார் எம்ஜிஆர்! அந்த வன்மம் காலகாலமாக தொடர்கிறது. இந்த நிலையில், சண்முகம் சொல்லியே பண்ருட்டியாரை நீக்கியுள்ளார் எடப்பாடி.

அட்வைஸ்

அட்வைஸ்

இதற்கிடையே, நேற்றுமுன்தினம்கூட பண்ருட்டியாரை சந்தித்தார் ஓபிஎஸ். அப்போது, அரசியல் செய்யத் துவங்குங்கள் என பண்ருட்டியார் ஓபிஎஸ்சுக்கு அட்வைஸ் செய்தார். நேரடி அரசியலுக்கு வாருங்கள் என பதிலுக்கு ஓபிஎஸ்சும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தான், பண்ருட்டியாரை அரசியல் ஆலோசகராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ். இனி, மா.செ.க்கள் பலரையும் நியமித்து அதிரடி அரசியலை காட்டப்போகிறாராம் ஓபிஎஸ் என்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பில். அதேசமயம், என்னைக்கோ நடந்த பழைய விஷயத்தை மனதில் வைத்து, இப்போ வந்து அதிகாரத்தில் காட்ட வேண்டுமா? இத்தனை காலமும் பண்ருட்டி அதே கட்சியில்தானே இருந்தார்? ஒரு தனிநபர் பகைமைக்காக ஒரு சீனியரின் பதவியை பறிப்பதா? அதுவும் ஆளுமையை நிரூபித்து வரும் எடப்பாடியே செய்யலாமா? என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+