"உடலுறவு".. திடீரென வந்த சத்தம்.. டென்ஷன் ஆன "அபிராமி".. அதுக்குன்னு இப்படியா.. கொடுமை

உடலுறவு கொண்டபோது அழுத குழந்தையின் கையை உடைத்துள்ளார் இளம்தாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்காதல் ஜோடி ஒன்று ஜாலியாக இருந்துள்ளது.. அந்த நேரம் பார்த்து குழந்தை அழுதுள்ளது.. இதுதான் அந்த ஜோடிக்கு எரிச்சலை கிளப்பி விட்டுள்ளது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் ஒரு எல்லையே இல்லாமல் ஊருவிட்டு, மாவட்டம் விட்டு, மாநிலம் விட்டு, நாடு விட்டு, நாடு கடந்து போய் கொண்டிருக்கிறது..!

எத்தனையோ சட்டங்கள் இருந்தும், பெண்களுக்கு ஏராளமான பாதிப்புகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கின்றன..

 கள்ளக்காதல்கள்

கள்ளக்காதல்கள்

இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கே தெரியாமலே அக்கிரமம் நடந்து வருகிறது என்றால், சில இடங்களில் அந்த பெண்களுக்கு தெரிந்தும், உடந்தையாக இருந்தும் அநியாயங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. இதில் பிரதான இடத்தில் இருப்பது கள்ளக்காதலால் ஏற்படும் வன்முறை சம்பவங்கள்தான்.. பெற்றோர்களை கொல்வதும், கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்வதும் என, பெண்களே இத்தகைய கொடூரங்களில் இறங்கி வருகின்றனர்.. அதிலும், உலகமே அறியாத, பிஞ்சு குழந்தைகளை, பெற்ற தாயே துடிதுடிக்க கொல்வதை, ஜீரணிக்கவே முடியவில்லை.

 வண்ணாரப்பேட்டை

வண்ணாரப்பேட்டை

இதோ இன்றும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. சென்னை வண்ணாரப்பேட்டை சிமெண்ட்ரோட்டை சேர்ந்தவர் கபிலன்... மனைவி பெயர் தமிழரசி.. 21 வயதாகிறது.. இரண்டரை வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளது.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு வெடித்தது.. அதனால், கபிலன், வெறுத்து போய், வீட்டை விட்டே கிளம்பி சென்றுவிட்டார். பெண் குழந்தையுடன் தமிழரசி மட்டும் அந்த வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார்.

 ஸ்டிராங் உறவு

ஸ்டிராங் உறவு

அப்போதுதான் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் தமிழரசிக்கு பழக்கம் ஏற்பட்டது.. அந்த உறவு, கள்ளக்காதலில் வந்து ஸ்டிராங்காக நின்றுவிட்டது.. வீட்டில் இருவருமே தனிமையில் ஜாலியாக இருந்து வந்தனர்.. ஆனால், சிவா வீட்டுக்கு வரும்போது ஜனனி தொந்தரவாக இருந்ததாக கூறப்படுகிறது. அதிலும் இவர்கள் உல்லாசமாக இருக்கும்போது, ஜனனி அழுதாலோ, ஏதாவது தொந்தரவு செய்தாலோ, இருவருமே அந்த குழந்தையை போட்டு அடிப்பார்களாம்.. அப்படித்தான், 2 நாட்களுக்கு முன் தமிழரசியும், கபிலனும் ஜாலியாக இருந்துள்ளனர்.

 பிஞ்சு கையை நொறுக்கினர்

பிஞ்சு கையை நொறுக்கினர்

அந்த நேரம் பார்த்து ஜனனி, அம்மாவிடம் போக வேண்டும் என்று அழுதிருக்கிறாள்.. இதனால், எரிச்சலடைந்த தமிழரசி, ஜனனியின் கையை அடித்து நொறுக்கி உள்ளார்.. அத்துடன் அந்த பிஞ்சுவின் கையையும் உடைத்துள்ளார்... வலது கையை முறுக்கி உள்ளார்.. இதனால், வலி பொறுக்க முடியாமல் அந்த குழந்தை கதறி அழுததையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.. சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே, குழந்தைகள் நல அலுவலர் காருண்யா தேவி என்பவருக்கு, விஷயம் தெரிந்தது.. உடனடியாக, வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசில் புகார் தந்துவிட்டார்..

உல்லாசம்

உல்லாசம்

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசியிடம் விசாரணை நடத்தினர்... அப்போதுதான், விசாரணையில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது, தொல்லை செய்ததால் பெண் குழந்தையின் கையை உடைத்ததாக வாக்குமூலம் தந்தார்.. இப்போது குழந்தைக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. அந்த அதிசய தாய் புழலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.. நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கும் "அபிராமிகளை" பார்த்து, தமிழகமே கவலை கொண்டுள்ளது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+