வாட்ச் பண்ணுங்க! ரிசல்ட் நாளில்.. போகஸை திருப்பிய திமுக.. இதுதான் தமிழக அரசியலையே தீர்மானிக்க போகுது
சென்னை: மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ளன. இந்த தேர்தல் முடிவுகளை தமிழ்நாட்டில் இருந்து திமுகவும் சில விஷ்யங்களுக்காக கூர்ந்து கவனித்து வருகிறதாம்.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் நேற்று நடந்தது. இதில் மிசோரம் தவிர 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ளன.
மொத்த கணிப்பு; இந்த 5 மாநில தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகள் சமீபத்தில் வெளியாகின. இந்த கணிப்புகள் பல்வேறு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. மொத்த கணிப்புப்படி மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பாஜக தக்க வைக்கும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக அங்கே வெற்றிபெறும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கர் , தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன. மிசோரத்தில் இழுபறி ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் 5 மாநிலங்களில் 1ல் ஏற்கனவே ஆட்சியில் இருந்ததை.. ராஜஸ்தானில் காங்கிரஸ் இழக்க உள்ளது. அதே சமயம் தெலுங்கானாவில் ஆட்சியை பெற உள்ளது.
காங்கிரஸ் பின்னடைவு; இந்த தேர்தல் கிட்டத்தட்ட அரையிறுதி தேர்தல் போல பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது.
( 4 மாநில தேர்தல் முடிவு வந்ததும்.. 2 பேரின் அரசியல் வாழ்க்கையே ஓவர் ஆக போகுது.. சரியும் சகாப்தம்!)
போகசை திருப்பும் திமுக; மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ளன. இந்த தேர்தல் முடிவுகளை தமிழ்நாட்டில் இருந்து திமுகவும் சில விஷ்யங்களுக்காக கூர்ந்து கவனித்து வருகிறதாம்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலை வடஇந்தியாவில் தொடர்ந்து உள்ளது இந்த கணிப்பு மூலம் தெரிகிறது. 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர் தவிர வேறு எங்கும் காங்கிரஸ் ஆதரவு மனநிலை வடஇந்தியாவில் இல்லை. அதே சமயம் தென்னிந்தியாவில் காங்கிரஸ் வலிமை அடைந்து வருகிறது. முக்கியமாக கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் தற்போது தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக வலுவான பிஆர்எஸ் ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. தெற்கில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை இது காட்டுகிறது.
திமுகவிற்கு போன செய்தி; இது திமுகவிற்கு போன முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது. தெற்கில் காங்கிரஸ் ஆதரவு பெருகுகிறது.. வடக்கில் காங்கிரஸ் ஆதரவு சரிகிறது என்பதை திமுக உணரும் நிலை ஏற்பட்டு உள்ளது. தெற்கில் காங்கிரஸ் ஆதரவு உயர்வதை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் கூடுதல் இடங்களை காங்கிரஸ் கேட்கும் வாய்ப்புகள் உள்ளன.

லோக்சபா தேர்தலில் கூடுதல் இடங்களை காங்கிரஸ் கேட்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வடக்கில் காங்கிரசுக்கு ஆதரவு குறைவாக உள்ளது. தெற்கை மனதில் வைத்து திமுகவிடம் 15 இடங்களை காங்கிரஸ் கேட்கும் திட்டத்தில் உள்ளதாம். தெலுங்கானா வெற்றி காங்கிரஸ் உத்வேகத்தை அதிகரித்து கூடுதல் இடங்களை கண்டிப்பாக திமுகவிடம் லோக்சபா தேர்தலில் கேட்க வைக்கும்.
ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுக்காது என்கிறார்கள் விவரம் றிந்தவர்கள். கடந்த தேர்தலில் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் தரப்பட்டது. விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதை காங்கிரஸ் 6-7 இடங்கள் என்று குறைக்க திமுக முடிவு செய்துள்ளது. அதேபோல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 1 இடம் என்ற அளவில் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் கூட்டணி கட்சிகள் அப்செட் ஆகும் வாய்ப்பு உள்ளது. இதனால் கூட்டணியில் மோதல் கூட ஏற்படலாம். அதுவும் தெலுங்கானா வெற்றி காங்கிரசுக்கு கூடுதல் பலத்தை கொடுப்பதால் திமுக சுதாரிக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications