Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஸ்வின் இப்படி பண்ணது சரியா? முகத்தை தொங்கபோட்டு.. கோபமாக சீறிய இளம் வீரர்! பரபர சம்பவம்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று ராஜஸ்தான் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அஸ்வின் - ரியான் பராக் நடந்து கொண்ட விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Recommended Video

    Ashwin-ஐ முறைத்த Riyan Parag.. ரசிகர்கள் கடும் கண்டனம் #Cricket | Oneindia Tamil

    2022 ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி பைனலுக்கு சென்றுள்ளது. நேற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்தே வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆடியது.

    ஜெய்ஸ்வால் சரியாக ஆடாத நிலையில் பட்லர் 56 பந்தில் 2 சிக்ஸ், 12 பவுண்டரி என்று 89 ரன்கள் எடுத்தார். அதேபோல் கேப்டன் சஞ்சு சாம்சன் 5 பவுண்டரி, 3 சிக்ஸ் என்று 26 பந்தில் 47 ரன்கள் எடுத்தார்.

    குஜராத் வெற்றி

    குஜராத் வெற்றி

    188-6 எடுத்த ராஜஸ்தான் குஜராத் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. சாகா அவுட் ஆனாலும், கில், மேத்யூவேட் ஆகியோர் தலா 35 ரன்களை எடுத்து அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். குஜராத் அணியும் தொடக்கத்தில் இருந்தே பக்கா இண்டெட்டுடன் ஆடியது. கேப்டன் பாண்டியா வெறும் 27 பந்தில் 5 பவுண்டரி உட்பட 40 ரன்கள் எடுத்தார். பின்னர் வெறும் 38 பந்தில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி என்று மொத்தமாக ஆட்டத்தை இவர் புரட்டி போட்டார்.இதனால் குஜராத் எளிதாக 19.3 ஓவரில் இலக்கை அடைந்து வென்றது.

    கடைசி ஓவர்

    கடைசி ஓவர்

    நேற்று இந்த போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்த போது கடைசி ஓவரின் கடைசி ஓவரில் ஜோஸ் பட்லர் அவுட் ஆனார். அவர் செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 89 ரன்களில் ரன் அவுட் ஆனார். அந்த கடைசி ஓவரை யாஷ் தயால் வீசினார். ஆனால் பட்லர் அவுட்டான இந்த பந்து நோ பால் ஆகும். நோ பால் என்றாலும் ரன் அவுட் கணக்கில் வரும்.

    ரியான் பராக்

    ரியான் பராக்

    இதான் ரியான் பராக் நான் ஸ்டிரைக்கர் எண்டில் பேட்டிங் இறங்கினார். அஸ்வின் ஸ்டிரைக்கர் எண்டில் இருந்தார். கடைசி பந்தில் ப்ரீ ஹிட்டில் மீண்டும் யாஷ் தயால் வைட் பந்து போட்டார். இந்த பந்தில் ரன் எடுக்கலாம் என்று ரியான் பராக் வேகமாக ஓடி வந்து ஸ்டிரைக்கர் எண்டிற்கு வந்தார். ஆனால் அஸ்வின் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல், அப்படியே ஸ்டிரைக்கர் எண்டில் இருந்தார்.

    அஸ்வின்

    அஸ்வின்

    இதனால் ரியான் பாரக் ரன் அவுட் செய்யப்பட்டார். அஸ்வின் இப்படி செய்ததை பார்த்து ரியான் பராக் கடுப்பாகி சீறினார். அஸ்வினை பார்த்து ஏன் ஓடவில்லை என்பது போல சிக்னல் காட்டி கேள்வி எழுப்பினார். அதோடு மிக கோபமாக பெவிலியன் திரும்பி வந்தார். பெவிலியனில் ரியான் பராக் கோபமாக பேட்டை தரையில் அடித்தார். ஆனால் அஸ்வின் இதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

    ஏன் இப்படி?

    ஏன் இப்படி?

    இதை இரண்டு விதமான நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அதன்படி அஸ்வின் செய்தது தவறு. அவர் ரன் ஓடி இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். இன்னொரு பக்கம் ரியான் பராக் செய்ததுதான் தவறு. அவர்தான் ப்ரீ ஹிட் பந்தில் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும் என்று தேவையின்றி வைட் பந்தில் ஓடி வந்துவிட்டார். அவர் செய்ததுதான் தவறு என்றும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+