Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டென்சன்.. இப்படி ஆகிடுச்சே.. 7 மணி நேரம் காத்திருந்த "எம்பி" இளையராஜா.. ஏர்போர்ட்டில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் எம்பி இளையராஜா 7 மணி நேரம் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றும் இன்றும் அதிகாலையும் மழை பெய்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது.

முக்கியமாக சென்னையில் ஏர்போர்ட் உள்ள மீனம்பாக்கத்திலும் கடுமையாக மழை பெய்தது.

சென்னை

சென்னை

இதனால் சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் தாமதம் ஆனது. முக்கியமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதம் ஆனது. ரன் வேயில் தண்ணீர் இருந்தது, மோசமான வானிலை, மேகமூட்டம் போன்ற காரணங்களால் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பலர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கஷ்டப்பட்டனர்.

மழை

மழை

அதேபோல் சென்னைக்கு வர வேண்டிய சில விமானங்கள் பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த 7-8 மணி நேரமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அதிக எண்ணிக்கையில் காத்து இருக்கின்றனர். இவர்களுக்காக மாற்று ஏற்பாடுகள் சரியாக செய்து கொடுக்கப்படவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டு வருகிறது. இசையமைப்பாளர் எம்பி இளையராஜாவும் இதில் காத்து இருந்தார்.

விமானம்

விமானம்

ஹங்கேரிக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக இளையராஜா செல்ல இருந்தது. இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்தார். எம்பி என்பதால் விஐபி பகுதியில் இவர் காத்து இருந்தார். ஆனால் அவர் செல்ல வேண்டிய விமானம் தாமதம் ஆனது. இந்த விமானம் துபாய் சென்று அங்கிருந்து கனெக்டிங் விமானம் மூலம் ஹங்கேரிக்கு செல்ல வேண்டும். முதலில் இந்த விமானம் 2 மணி நேரம் தாமதம் என்று கூறப்பட்டது.

இளையராஜா

இளையராஜா

அதன்பின் மேலும் 3 மணி நேரம் விமானம் தாமதம் ஆனது. இதன் காரணமாக விமான நிலையத்தில் இளையராஜா கொஞ்சம் டென்ஷனாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சென்னை வானிலை சரியாகவில்லை. இதனால் மேலும் 2 மணி நேரம் விமானம் தாமதம் ஆனது. இதன் காரணமாக 7 மணி நேரமாக விமானத்திற்காக இளையராஜா காத்து இருந்தார். அங்கு இருந்த காத்திருப்பு அறையில் அவர் ஓய்வு எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+