“ட்விஸ்ட்”.. வெற்றிக் கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் அணியினர்.. எடப்பாடி ஜெயிலுக்கு போவாராம்.. என்ன இது?
முடிவை தள்ளிப்போட்டதே எங்கள் வெற்றிதான் என ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் மார்ச் 24ல் உத்தரவு பிறப்பிக்கப்படும், அதுவரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை இல்லை என்றாலும், தீர்ப்பு வரும் வரை முடிவுகளை அறிவிக்கக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளதையே வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர் ஓபிஎஸ் தரப்பினர்.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முடிவை, தள்ளிப் போட்டதே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தரப்பு வெடி வெடித்து கொண்டாட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்துள்ளார். இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்தனர்.

சட்ட விரோதம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரினர். நீதிபதி குமரேஷ் பாபு இன்று அவசர வழக்காக இதனை விசாரித்தார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பிலும் பரபரப்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், தேர்தல் ஆணையம் இதுவரை இடைக்கால பொதுச் செயலாளராக யாரையும் அங்கீகரிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது. விதிகளை மாற்றி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வர முயற்சிப்பது சட்ட விரோதம் என்றும் வாதிடப்பட்டது.

எடப்பாடி தரப்பு
மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்கட்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது. ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால், ஏன் கொண்டுவரக்கூடாது என்ற காரணத்தை ஓ.பி.எஸ். தரப்பினர் கூறவில்லை. சூழ்நிலைகள் மாறியதால் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. தீர்மானம் சட்டவிரோதமானது அல்ல; கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.

நீதிபதி உத்தரவு
இதையடுத்து நீதிபதி குமரேஷ் பாபு, "தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிக்கிறேன். 24ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது" என்று உத்தரவிட்டார்.

வெடி வெடித்து கொண்டாட்டம்
பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த ஓபிஎஸ் தரப்பு தடை கோரியது, ஆனால், அதற்கு நீதிபதி தடை ஏதும் விதிக்கவில்லை, முடிவை மார்ச் 24ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என்று மட்டுமே கூறியுள்ளார். அதாவது 4 நாட்களுக்கு முடிவை அறிவிக்க முடியாது, அவ்வளவுதான். எனினும், இதனை ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். இந்த உத்தரவையடுத்து, "இது எங்களுக்கு கிடைத்த வெற்றி" எனக் கூறி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

ஜெயிலுக்குப் போகவேண்டும்
உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முடிவை, தள்ளிப் போட்டதே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். நீதி, நேர்மை எங்கள் பக்கம் இருக்கிறது; பொதுச்செயலாளர் என்று அறிவித்தால் பழனிசாமி ஜெயிலுக்குதான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
எங்களுக்கா ஓட்டு இல்லை? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 9 இடங்களில் டெபாசிட் இழந்ததே! கிருஷ்ணசாமி பதிலடி -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications