“ட்விஸ்ட்”.. வெற்றிக் கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் அணியினர்.. எடப்பாடி ஜெயிலுக்கு போவாராம்.. என்ன இது?
முடிவை தள்ளிப்போட்டதே எங்கள் வெற்றிதான் என ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் மார்ச் 24ல் உத்தரவு பிறப்பிக்கப்படும், அதுவரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை இல்லை என்றாலும், தீர்ப்பு வரும் வரை முடிவுகளை அறிவிக்கக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளதையே வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர் ஓபிஎஸ் தரப்பினர்.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முடிவை, தள்ளிப் போட்டதே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தரப்பு வெடி வெடித்து கொண்டாட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்துள்ளார். இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்தனர்.

சட்ட விரோதம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரினர். நீதிபதி குமரேஷ் பாபு இன்று அவசர வழக்காக இதனை விசாரித்தார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பிலும் பரபரப்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், தேர்தல் ஆணையம் இதுவரை இடைக்கால பொதுச் செயலாளராக யாரையும் அங்கீகரிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது. விதிகளை மாற்றி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வர முயற்சிப்பது சட்ட விரோதம் என்றும் வாதிடப்பட்டது.

எடப்பாடி தரப்பு
மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்கட்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது. ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால், ஏன் கொண்டுவரக்கூடாது என்ற காரணத்தை ஓ.பி.எஸ். தரப்பினர் கூறவில்லை. சூழ்நிலைகள் மாறியதால் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. தீர்மானம் சட்டவிரோதமானது அல்ல; கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.

நீதிபதி உத்தரவு
இதையடுத்து நீதிபதி குமரேஷ் பாபு, "தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிக்கிறேன். 24ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது" என்று உத்தரவிட்டார்.

வெடி வெடித்து கொண்டாட்டம்
பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த ஓபிஎஸ் தரப்பு தடை கோரியது, ஆனால், அதற்கு நீதிபதி தடை ஏதும் விதிக்கவில்லை, முடிவை மார்ச் 24ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என்று மட்டுமே கூறியுள்ளார். அதாவது 4 நாட்களுக்கு முடிவை அறிவிக்க முடியாது, அவ்வளவுதான். எனினும், இதனை ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். இந்த உத்தரவையடுத்து, "இது எங்களுக்கு கிடைத்த வெற்றி" எனக் கூறி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

ஜெயிலுக்குப் போகவேண்டும்
உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முடிவை, தள்ளிப் போட்டதே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். நீதி, நேர்மை எங்கள் பக்கம் இருக்கிறது; பொதுச்செயலாளர் என்று அறிவித்தால் பழனிசாமி ஜெயிலுக்குதான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
நிலம் அபகரிப்பு.. அதிமுக MP தம்பிதுரைக்கு எதிரான வழக்கு! மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
இதையே தான் அந்த டெய்லரும் சொன்னான்.. பன்னீர்செல்வம் பிளாஷ்பேக்.. பங்கப்படுத்திய உதயகுமார் -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
தீயாய் வேலை செய்யும் திமுக..ஆமை வேகத்தில் அதிமுக! இப்படியே போனால் அவ்வளவு தான்? எடப்பாடிக்கு பிரஷர்! -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
அதிமுகவுக்கு தொடரும் தோல்வி.. ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர்.. சபதமெடுத்த ஓ.பன்னீர்செல்வம் -
"அண்ணன் எடப்பாடியாரே.. எச்சரிக்கையா இருங்க”.. நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை.. திருமாவளவன் வார்னிங்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க












Click it and Unblock the Notifications