மோடியின் மாஸ்டர்பிளான்.. ஓய்வூதியத்தில் வர இருக்கும் மிகப்பெரிய மாற்றம்.. EPFO வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 11 வரை நீட்டித்துள்ளது.
மத்திய அரசின் EPFO அமைப்புதான் ஊழியர்களின் பென்சன் கணக்குகளை நிர்வகித்து வருகிறது. ஊழியர்களுக்கு எப்படி பென்சன் கொடுக்க வேண்டும் என்பதற்கான விதிகளை வகுப்பது இவர்கள்தான்.
இந்த நிலையில் இந்த விதிகளில் இவர்கள் முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளார்களாம். தற்போது பயன்படுத்தப்படும் பாரம்பரிய விதியை மாற்ற இவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்கு இடையில்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 11 வரை நீட்டித்துள்ளது, இது இரண்டு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக இப்படி காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை காலக்கெடுவை நீட்டிப்பதில் சில வித்தியாசங்கள் உள்ளன. அதன்படி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 30 வரை மூன்று மாதங்கள் கூடுதல் அவகாசம் மற்றும் ஊழியர்களுக்கு ஜூலை 11 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 26ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. அது தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் உயர் ஓய்வூதிய விருப்பத்திற்காக, இதுவரை 16.06 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக EPFO அறிக்கை தெரிவித்துள்ளது.
மாற்றம்: இது போக இப்போது இருக்கும் விதிப்படி ஒருவர் வாங்கும் வருமானத்தில் கடந்த 60 மாதங்கள் பெற்ற சராசரி வருமானத்தாய் அவர்களின் பென்சன் சர்வீஸ் மூலம் பெருக்கி அதை 70 ஆல் வகுக்கும் முறை உள்ளது.ஆனால் இதை மாற்ற உள்ளனர். புதிய விதிப்படி வெறும் 60 மாத வருமானத்தின் சராசரியை மட்டும் கணக்கிடாமல் மொத்தமாக அவர்கள் வேலை பார்த்த அனைத்து வருடத்தின் சராசரி சம்பளம் எடுக்கப்படும்.
உதாரணமாக இப்போது இருக்கும் முறைப்படி கடந்த 60 மாதங்களில் உங்கள் வரும் 80 ஆயிரம் மற்றும் பென்சன் 32 வருடங்கள் என்று வைத்துக்கொள்வோம். 80,000 ஐ 32 ஆல் பெருக்கி 70 ஆல் வகுக்க வேண்டும். பென்சன் தொகை 36,571 ரூபாய் வரும்.புதிய முறைப்படி வெறும் 60 மாத வருமானத்தின் சராசரியை மட்டும் கணக்கிடாமல் மொத்தமாக அவர்கள் வேலை பார்த்த அனைத்து வருடத்தின் சராசரி சம்பளம் எடுக்கப்படும். இதனால் தொடக்க காலங்களில் நீங்கள் வாங்கிய 30, 40 ஆயிரம் வருமானத்தையும் வைத்து சராசரி கணக்கீடு செய்வார்கள்.

அப்படி செய்யும் பட்சத்தில் உங்களின் பென்சன் தொகை கணிசமாக குறையும். இந்த புதிய பென்சன் கணக்கீட்டு முறையைத்தான் கொண்டு வர மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இபிஎப்ஓ ஆலோசனை செய்து வருகிறதாம்.இது இன்னும் அமலுக்கு வரவில்லை. தற்போதைக்கு பரிசீலனையில்தான் உள்ளது.
மோடி பிளான்: இது போக மத்திய அரசு பணியாளர்களுக்கு பிரதமர் மோடி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் காரணமாக வரப்போகும் இந்த தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கியமான ஒரு அறிவிப்பை மத்திய பாஜக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் வருமானம் பெரிய அளவில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி, மீண்டும் அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு பணியாளர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படியே மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது.
அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் முன்கூட்டியே.. அதாவது ஜூன் மாத இறுதியிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications