நாளை சந்திர கிரகணம்.. சென்னையில் தெரியுமா? சிகப்பு பந்து போல் நிலா காட்சியளிப்பது ஏன்?
சென்னை: சந்திர கிரகணத்தின் போது நிலவானது ஏன் சிவப்பு நிறத்தினாலான பந்து போல் காட்சியளிக்கிறது தெரியுமா?
சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என்பது ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் வானியல் நிகழ்வாகும். இந்த இரு நிகழ்வுகளின் போது கோயில்கள் திறக்கப்படாது, வீடு வாசல்களை மக்கள் துடைத்து பூஜை சாமான்களை தேய்த்து புதிதாக பூஜை செய்வர்.
அறிவியலை பொருத்தமட்டிஸ் சந்திரகிரகணம் என்பது பூமியின் நிழல் நிலவின் மீது விழும் போது ஏற்படுவது ஆகும். பூமியின் நிழல் கருமையான நிழலானது நிலவின மீது மொத்தமாக விழுவதுதான் முழு சந்திரகிரகணம் என அழைப்போம்.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணத்தின் போது முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். அப்போது சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும். கடந்த 25 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை செவ்வாய்க்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

முழு சந்திர கிரகணம்
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க இயலாது. சந்திரன் உதயமாவதற்கு முன்பே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். இந்தியாவின் கிழக்கு பகுதிக்குச் செல்ல செல்ல சந்திர கிரகணத்தை பார்க்க இயலும். இந்த பகுதிகளில் சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ஏற்படும். தமிழகத்தில் சென்னையில் சந்திரன் இந்திய நேரப்படி 5 மணி 39 நிமிடங்கள் உதிக்கும்.

40 நிமிடங்கள் நீடிக்கும்
சந்திர கிரகணத்தை 40 நிமிடங்கள் காணலாம். சந்திர கிரகணம் நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. கரு நிழல் விழுவது 2.38 மணிக்கும் முழு சந்திர கிரகணம் தொடங்குவது பிற்பகல் 3.45 மணிக்கும் முழு கிரகணம் ஏற்படும் நேரம் 4.18 மணிக்கும் முழு சந்திர கிரகணம் முடியும் நேரம் மாலை 5.11 மணிக்கும் கிரகணம் முடியும் நரம் இரவு 7.27 மணியாகும்.

நிறங்கள்
கிரகணம் ஏற்படும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது என்பதை பார்ப்போம். வெள்ளை ஒளிக்குள் 7 நிறங்கள் இருக்கிறது. அதாவது VIBGYOR என குறிப்பிடுவோம். ஊதா, அக சிகப்பு, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிகப்பு ஆகிய நிறங்களாகும். இதில் நீல நிறமானது பூமியின் வளிமண்டலத்தில் ஒளிச் சிதறல் அடைகிறது. இதன் காரணமாக வானம் நீல நிறமாக இருக்கிறது.

சிவப்பு நிறப்பு
அதே போல ஒளியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும் போது சிவப்பு நிறமானது ஒளி விலகல் அடைந்து அது நிலவின் மீது படுகிறது. இதனால்தான் நிலவானது கிரகணத்தின் போது சிவப்பு நிறமாக காணப்படுகிறது. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். சிறப்பு உபகரணங்கள் ஏதும் தேவையில்லை. இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் அடுத்து ஆண்டு 2023 அக்டோபர் 23 தேதியாகும்.












Click it and Unblock the Notifications