நடவடிக்கை எடுக்க முடியலையா.. வேலையை விட்ருங்க.. கட்சியில் சேர்ந்துடுங்க.. ஹைகோர்ட் சுளீர்
சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை: விதிமீறல் பேனர்கள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர வேண்டியது தானே என ஐகோர்ட் நீதிபதிகள் அதிகாரிகளை சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் சாலையோரங்களில் விதிகளை மீறி பேனர்கள் வைக்கிறார்கள் என்றும், அப்படி பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் பேனர்கள் வைப்பது குறையாமலே இருந்ததால், அடுத்தடுத்து நிறைய மனுக்களை இது தொடர்பாகவே தாக்கல் செய்து வந்தார்.

விளக்கம்
இதுகுறித்து இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, கட்சி பேனர்கள் அகற்றப்பட்டது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.

மதிப்பதே இல்லை
ஆனால் அதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. 5 ஆண்டுகளாக பேனர்களை எடுக்க சொல்லி உத்தரவிட்டும், அதிகாரிகள் மதிப்பதே இல்லை என்று காட்டமாக கூறியதுடன், இதுவரை பேனர்கள் வைத்தவர்கள் மீது என்னதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதை பற்றின விவரங்கள் எதுவும் இல்லையே என்றும் தெரிவித்தனர்.

ராஜினாமா
மேலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படி நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, விருப்பமான கட்சியில் சேர வேண்டியது தானே என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஒத்தி வைப்பு
பேனர்கள் அகற்றுவது சம்பந்தமாக 5 வருஷமாக அரசு சொல்லும் காரணங்களை கேட்டு சோர்வே அடைந்துவிட்டோம் என்று தெரிவித்த நீதிபதிகள் இதுபற்றி விரிவான விளக்கம் அடங்கிய அறிக்கையை நாளை தாக்கல் செய்யும்படிஅரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கையும் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications