நடவடிக்கை எடுக்க முடியலையா.. வேலையை விட்ருங்க.. கட்சியில் சேர்ந்துடுங்க.. ஹைகோர்ட் சுளீர்
சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை: விதிமீறல் பேனர்கள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர வேண்டியது தானே என ஐகோர்ட் நீதிபதிகள் அதிகாரிகளை சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் சாலையோரங்களில் விதிகளை மீறி பேனர்கள் வைக்கிறார்கள் என்றும், அப்படி பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் பேனர்கள் வைப்பது குறையாமலே இருந்ததால், அடுத்தடுத்து நிறைய மனுக்களை இது தொடர்பாகவே தாக்கல் செய்து வந்தார்.

விளக்கம்
இதுகுறித்து இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, கட்சி பேனர்கள் அகற்றப்பட்டது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.

மதிப்பதே இல்லை
ஆனால் அதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. 5 ஆண்டுகளாக பேனர்களை எடுக்க சொல்லி உத்தரவிட்டும், அதிகாரிகள் மதிப்பதே இல்லை என்று காட்டமாக கூறியதுடன், இதுவரை பேனர்கள் வைத்தவர்கள் மீது என்னதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதை பற்றின விவரங்கள் எதுவும் இல்லையே என்றும் தெரிவித்தனர்.

ராஜினாமா
மேலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படி நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, விருப்பமான கட்சியில் சேர வேண்டியது தானே என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஒத்தி வைப்பு
பேனர்கள் அகற்றுவது சம்பந்தமாக 5 வருஷமாக அரசு சொல்லும் காரணங்களை கேட்டு சோர்வே அடைந்துவிட்டோம் என்று தெரிவித்த நீதிபதிகள் இதுபற்றி விரிவான விளக்கம் அடங்கிய அறிக்கையை நாளை தாக்கல் செய்யும்படிஅரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கையும் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications