யாருமே ஆர்வம் காட்டல.. கூட்டணி இன்றி தனித்து விடப்படும் எடப்பாடி? அதிமுகவிற்கு இப்படி ஒரு நிலைமையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய நேரடி மற்றும் மறைமுக கூட்டங்களில் இதுவரை யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசியலில் எங்கே அதிமுக தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக சமீபத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்தது.

Why No party is showing interest in AIADMK alliance and Edappadi Palanisamy for Lok Sabha 2024

கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்தனர். அதாவது யாருடன் கூட்டணி வைக்கலாம்.. யாருடன் கூட்டணி வைக்க கூடாது.. எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

யாரும் பங்கேற்கவில்லை: ஆனால் லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.

ரகசிய மீட்டிங் : அதன்பின் அதிமுகவின் டாப் லீடர் சார்பாக பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. முக்கியமாக விஐபி மாஜி ஒருவர் சார்பாக பல்வேறு கட்சிகளிடம் ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால் பாமக, தேமுதிக என்று எந்த கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் கடைசி வரை கூட்டணி பேச்சுவார்த்தையை, திட்டங்களை அதிமுக முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக விஐபி மாஜி நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக மட்டும் முதலில் கொஞ்சம் பாசிட்டிவ்வாக பேசி உள்ளது.

பாமக அதிக இடம்: ஆனால் பாமக அதிக இடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாமக - அதிமுக கூட்டணி படியவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே புரட்சி பாரதம் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மற்றபடி தேமுதிக உட்பட வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

தனித்து விடப்படும்: ஏற்கனவே பாஜகவுடன் மட்டும் கூட்டணி வைக்க வேண்டாம் என்று எடப்பாடி சார்பாக உறுதியாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் கிட்டத்தட்ட லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்துவிடப்பட்டுவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக இல்லை: இந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியான சில வார்த்தைகளை கட்சியின் டாப் தலைவர்களிடம் கூறியதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முன்பாக.. பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டோம். பாஜகவை தவிர்த்து மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகள் நம் கூட கூட்டணி வைக்கும் வைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

30 தொகுதிகளில் நாம் போட்டியிடுவோம்.. மீதம் உள்ள 10 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்போம். பாஜக இல்லாமல் அதிமுகவின் உண்மையான பலம் என்ன என்பதை நிரூபிப்போம்.. இஸ்லாமிய கட்சிகள், கொங்கு அமைப்புகள், நாடார் அமைப்புகளுடன் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக டாப் தலைகளிடம் பேசி இருக்கிறாராம். ஆனால் எந்த கட்சியும் இப்போதைக்கு எடப்பாடி உடன் கூட்டணி வைக்க ரெடியாக இல்லை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+