பேப்பரை கிழித்த ராகுலுக்கு நேர்ந்தது தெரியுமா? அன்புமணிக்கு அதெல்லாம் நினைவிருக்கா? குவிந்த கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செய்தியாளர் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடந்து கொண்ட விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

2013 ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தொடர்பான முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், குறைந்தபட்சம் இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்ய மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படாது. மாறாக உடனடியாக அவர்கள் பதவியில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறியது.

Why PMK President Anbumani Ramadoss act against PMK MLA GK Mani is very wrong?

அந்த தீர்ப்பிற்கு எதிராக ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் அவசர அவசரமாக ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. அதாவது உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டியது இல்லை என்று திருத்தம் செய்து அவசர சட்ட மசோதாவை கொண்டு வந்தது.

காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்திருந்தது என்றாலும்.. காங்கிரஸ் தலைவராக அப்போது இருந்த ராகுல் காந்தி இதை கடுமையாக எதிர்த்தார். காந்தி தனது கட்சியின் முடிவுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். இந்த நடவடிக்கை "முழு முட்டாள்தனம்" என்று விமர்சித்தார். அதோடு செய்தியாளர் சந்திப்பில் அந்த சட்ட மசோதாவின் நகலை அவர் கிழித்தும் போட்டார்.

அவரின் செயல்.. தான் ஒரு ஹீரோ என்று நினைத்து செய்தது. ஆனால் அதுவே அவருக்கு எதிராக மாறியது. ஆணவக்காரர். ஷோ போடுகிறார். அவரின் கட்சி தானே.. மசோதா வரும் முன் தடுக்காமல் ஏன் செய்தியாளர் சந்திப்பில் சட்ட நகலை கிழிக்க வேண்டும்.. என்ன ஆணவம் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

அந்த சம்பவம் ராகுல் காந்தியின் இமேஜை டேமேஜ் செய்தது. அதன்பின் அரசியலில் பல விஷயங்களில் பலத்த அடி கிடைத்த பின் தற்போது தன்மையாக மாறி இருக்கும் ராகுல் காந்தி.. மென்மையாக பேசுவது, செய்தியாளர் சந்திப்பில் அன்பை, கனிவை பற்றி பேசுவது என்று தன்னை மெருகேற்றிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அந்த ஒரு சம்பவம் அரசியல் ரீதியாக ராகுலை பாதித்தது. அவருக்கு பெரிய பாடமாக இது அமைந்தது.

அன்புமணி அதே செயல்; அப்படி ஒரு சம்பவத்தைதான் செய்தியாளர் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்துள்ளார். அவர் நடந்து கொண்ட விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

அதன்படி செய்தியாளர் சந்திப்பில், சட்டப்பேரவைக்கு நேரமானதாக கூறிய ஜி.கே.மணியிடம் கடுப்பாகி பதில் அளித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அதில் நீங்க சட்டசபைக்கு போய் என்ன பண்ண போறீங்க? அங்க அப்படியே பேச போறீங்களா? நீங்க பேசுவதை கேட்டுடுவாங்கா? உங்களை அங்கே பேசவே விட மாட்டாங்க? நீங்க பேசிதான் மாறுமா? , என்று அன்புமணி பேசியதற்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

விமர்சனம்: அன்புமணியின் உடல்மொழி அவர் ஆணவமாக பேசியது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இவ்வளவு வெளிப்படையாக மூத்த தலைவரை செய்தியாளர் சந்திப்பில் விமர்சனம் செய்வது திகைப்பாக இருக்கிறது.

முக்கியமாக நீங்கள்தான் எம்பியாக இருந்தும் நாடாளுமன்றத்திற்கு கூட செல்வது இல்லை.. சிஏஏ சட்டத்தில் ஆதரவாக வாக்களிக்க மட்டும் சென்றீர்கள்.. உங்கள் எம்எல்ஏ சட்ட சபைக்கு செல்ல கூடாதா? என்று நெட்டிசன்கள் கேட்டு விமர்சனங்களை வைக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+