கட்சி தொடங்குவாரோ இல்லையோ? அசால்ட் மா.செ.க்களால் அப்செட் ஆன ரஜினி- பின்னணி இதுதானாம்!
சென்னை: ரஜினிகாந்த் அறிவித்தபடி கட்சியை தொடங்குவாரா இல்லையா? என்பது உறுதியாக தெரியாத நிலையில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ளாததுதான் அவரது ஏமாற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
Recommended Video
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் வழக்கம் போல போயஸ் கார்டனில் நடுத்தெருவில் நின்று ரஜினிகாந்த் பேட்டி கொடுத்தார். அப்போது, மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் தமக்கு ஏமாற்றம் ஏற்பட்டது; அதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.
மாவட்ட செயலாளர்கள் மீது அதிருப்தி இருந்தால் அதை சரி செய்ய வேண்டியது கட்சி தலைவரின் பொறுப்பை. அதை பொதுவெளியில் ஊடகங்களிடம் ஒரு புலம்பலாக ஒரு தலைவர் முன்வைப்பார்? என்கிற விமர்சனங்கள் ரஜினியை நோக்கி முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசினோம்.

அப்போது, ஓராண்டுக்கு முன்னர் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்புகளை வார்டு அளவில் மேற்கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் கூறினார். அதன்பின்னர் கட்சி தொடங்குவதற்கான எந்த சமிக்ஞையும் ரஜினிகாந்திடம் வெளிப்படவில்லை.

இதனால் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் மன்ற நிர்வாகிகளும் ஆர்வம் காட்டவில்லை. இன்று திடீரென வந்து அடிப்படை கட்டமைப்புகள் குறித்து கேள்வி கேட்டார் ரஜினி. உள்ளது உள்ளபடியே பல நிர்வாகிகளும் எந்த பணியும் முடிக்கவில்லை என தெரிவித்தனர். இதனால்தான் ரஜினிகாந்த் ஏமாற்றமடைந்தார். இதனைத்தான் ஊடகங்களிடமும் ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறியிருக்கிறார் என்கின்றனர்.
ஆரம்பமே படுஜோருதானப்பு!
-
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications