ஓஹோ.. கமல், ரஜினியை சீமான் தாளித்து எடுக்க இதுதான் காரணமா.. கமலும் தன் வாயால் கெட்டாரா..!
கமலுடன் சீமானுக்கு முரண்பாடு ஏற்பட என்ன காரணம்?
சென்னை: தமிழக அரசியலில் கமல் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்பதை முன்வைத்தே அடுத்தக்கட்ட அரசியல் நகரும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு சீமானும், கமலும், இணைவதாக ஒரு பேச்சு எழுந்தது.. பிறகு கமலும், ஓவைசியும் இணைவதாக ஒரு பேச்சு எழுந்தது.. ஆனால், இதை பற்றி உறுதியாக தெரிவதற்கு முன்பேயே, கமல் ரஜினியை வெளிப்படையாக அழைக்க ஆரம்பித்துவிட்டார்.. மக்களுக்காக ஈகோவை விடவும் தயார் என்றும் அறிவித்தார்.
இப்போது, மக்கள் இருக்கும் மனநிலையில், திமுகவின் வாக்குகளை பிரிப்பவர்களாக ரஜினி, கமல், சீமான், ஓவைசியும்தான் பார்க்கப்படுகிறார்கள்.. ஆரம்பத்தில் சீமான் கமலுடன் இணைவதாகத்தான் இருந்துள்ளது.. தன் பிடிவாதத்தை விட்டு, இறங்கிவிட சீமானும் முடிவு செய்திருந்தாராம்.
ஆனால், ரஜினி வருகை தங்களுக்கு ஆகாது என்று தெரிந்தும், ரஜினியை கமல் வம்படியாக அழைத்து கொண்டிருந்ததுதான் சீமான் தரப்புக்கு கடுப்பை தந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. மற்றொருபுறம் திமுகவுடன் பேச்சு நடத்துவதாகவும், 25 முதல் 30 சீட்டுக்கள் வரை மநீம ஒதுக்க தயாராக இருப்பதாகவும் செய்திகள் கசிந்தபடியே இருந்துள்ளது.
25 சீட் ஓகேன்னா, "அவர்" கிட்ட போகலாம்.. சீமானும் இல்லை.. ரஜினியும் டவுட்டு.. கமல் யாருடன் சேருவார்!
அதனாலேயே நேற்று முன்தினம் ரஜினி, கமல், விஜய் என மொத்த பேரையும் சீமான் சரமாரியாக தாளித்து எடுத்து விட்டார் என்று சொல்கிறார்கள். இதில், இவ்வளவு காலம் நல்ல இணக்கத்துடன் இருந்த விஜய் போல கமலையும் ஓபனாக சீமான் அட்டாக் செய்தது சற்று அதிர்ச்சியையே ஏற்படுத்தி வருகிறது..
எனினும், தன்னுடைய தத்துவத்துக்கும், கருத்தியலுக்கும் யாருடனும் கூட்டு சேர முடியாது என்பதாலும், ஓட்டரசியல் ஒரு பொருட்டே அல்ல. உரிமை அரசியலே முக்கியம் என்ற தன்னுடைய ரூட்டில் சீமான் தன் பயணத்தை தொடங்கிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.