Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூதாட்டிங்க கூட்டம்.. சிஎஸ்கே டிக்கெட் வாங்க லைனில் நின்றது ஏன் தெரியுமா? ஷாக்கடிக்க வைக்கும் காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சிஎஸ்கே போட்டியை சென்னையில் காண பெரிய அளவில் மக்கள் கூட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் வரிசையில் நின்றது. இதில் நடந்த சம்பவம் ஒன்று பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஐபிஎல் 2023 சீசன் தொடங்கியதில் இருந்தே சென்னை அணி மீது ஒரு முக்கிய காரணத்திற்காக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அது டிக்கெட் விவகாரம்.

Why some very old ladies are standing in line to buy the tickets of CSK match in Chepauk?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகளுக்கு ஆப்லைன், ஆன்லைன் டிக்கெட்டுகள் முறையாக விற்பனை செய்யப்படுவது இல்லை என்ற கடுமையான புகார்கள் உள்ளன.

100 சதவிகித டிக்கெட்டில் 70 சதவிகித டிக்கெட் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மீதம் உள்ள 30 சதவிகிதம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

காப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள், பிரபலங்களுக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. அல்லது இந்த டிக்கெட்டுகள் பார்க்க ஆள் இல்லாமல் அப்படியே வேஸ்ட்டாகிறது.

இதனால் சிஎஸ்கே போட்டிகளில் மக்கள் பார்க்க ஆர்வமாக இருந்தும் கூட மைதானத்தில் கூட்டம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

டிக்கெட்: இதனால் இருக்கிற 30 சதவிகித டிக்கெட்டுகளை வாங்க மக்கள் கடுமையாக முண்டியடிக்க தொடங்கி உள்ளனர். அதிகாலையிலேயே 4 மணிக்கு வந்து பலர் லைனில் நிற்கிறார்கள்.

லைனிலேயே சண்டை நடப்பது, போலீஸ் தடியடி நடத்துவது போன்ற சம்பவங்களும் நடக்க தொடங்கி உள்ளன. அதிலும் கடந்த முறை பலர் மயக்கம் போட்டு விழுந்து ஆம்புலன்ஸ் வரும் அளவிற்கு நிலைமை மோசமானது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் விற்பனையில் பல குளறுபடிகள் நடப்பதால் பிளாக்கில் டிக்கெட் 8 - 10 ஆயிரம் ரூபாய்க்கு கூட விற்பனை ஆகி வருகிறது.

Why some very old ladies are standing in line to buy the tickets of CSK match in Chepauk?

முதியவர்கள்: இந்த நிலையில்தான் கடந்த இரண்டு சேப்பாக்கம் போட்டிகளிலும் டிக்கெட் வாங்க அதிகாலையில் இருந்து சில மூதாட்டிகள் லைனில் நின்றனர். முக்கியமாக 60-70 வயது மூதாட்டிகள், சாலை ஓரம் கடை நடத்தும் மூதாட்டிகள் அங்கே லைனில் நின்று டிக்கெட் வாங்குகிறார்கள். டிக்கெட் வாங்க மற்றவர்கள் வெளியில் இருந்து வர வேண்டும். ஆனால் அங்கே வசிக்கும் சில மூதாட்டிகள் அதிகாலையில் எல்லோருக்கும் முன் லைனில் வந்து நிற்கின்றனர்.

மூதாட்டிகள் மட்டுமின்றி பல பெண்கள் அந்த பகுதியில் இப்படி வரிசையில் நின்று டிக்கெட் வாங்குகிறார்கள். அவர்கள் இப்படி டிக்கெட் வாங்குவது ஏன்? அவர்கள்தான் உண்மையில் டிக்கெட் வாங்கி பார்க்க போகிறார்களா என்பது தொடர்பாக அப்பகுதி மக்கள் இடையே விசாரித்தோம்.

இந்த விவகாரம் அங்கே புதிய பிஸ்னஸ் மாடலாகி உள்ளது. அதன்படி அதிகாலையிலேயே இவர்கள் டிக்கெட்டை காசு கொடுத்து வாங்கி விடுவார்கள். அதன்பின் மாலை நேரத்தில் டிக்கெட் எல்லாம் தீர்ந்த பின் அதிக காசுக்கு இதை ரசிகர்களுக்கு விற்கிறார்கள்.

டிக்கெட் கிடைக்காத ரசிகர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் இவரகள் விற்பனை செய்கிறார்கள். சேப்பாக்கத்தில் நடக்கும் சிஎஸ்கே போட்டிகளுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிக கிராக்கி உள்ளது.

தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்பதால் அதை பார்க்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.

தோனியும்.. எனக்கு ஃபேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது கிரிக்கெட் உலகில் வைரல் விவாதமாக மாறிவிட்டது.

அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். இதை பயன்படுத்திக்கொண்டு அங்கே இருப்பவர்களும் டிக்கெட்டை முன்பே வாங்கி வைத்துக்கொண்டு அதை கூடுதல் விலைக்கு விற்று பிஸ்னஸ் செய்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+