சிறப்பு எஸ்எஸ்ஐ வில்சன் கொல்லப்பட்டது ஏன்? கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிறப்பு எஸ்எஸ்ஐ வில்சன் கொல்லப்பட்டது ஏன்? கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் - வீடியோ

    சென்னை: களியக்காவிளை எஸ்ஐ வில்சனை கொன்றது ஏன் என விசாரணையில் கொலையாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளிகள் கேரளத்தில் தலைமறைவாகினர்.

    இந்த நிலையில் கொலையாளிகளின் புகைப்படங்களை வெளியிட்ட காவல் துறை அவர்களை பிடித்து கொடுத்தால் ரூ 7 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்தது.

    இருவர் கைது

    இருவர் கைது

    இது தொடர்பான புகைப்படங்கள் வெளியிட்டனர். தமிழகம் மற்றும் கேரளா மாநில போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் கொலையாளிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    வில்சன்

    வில்சன்

    இருவரும் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வந்ததால் வில்சனை சுட்டுக் கொன்றதாக அவர்கள் கூறினர்.

    தகவல்கள்

    தகவல்கள்

    போலீஸார் தங்களை என்கவுன்ட்டர் செய்யக் கூடும் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் வில்சனையும் கொன்றதாகவும் வாக்கு மூலத்தில் கூறியுள்ளனர்.

    நீதிமன்றத்தில் ஆஜர்

    நீதிமன்றத்தில் ஆஜர்

    இன்று காலை 11 மணிக்கு இவர்கள் இருவரும் குளித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த கொலையில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+