தமிழர் முகமூடியுடன் வரும் பாஜக.. சுதர்சன் ரெட்டியின் வெற்றி ஏன் முக்கியம்? அழுத்தமாக சொன்ன ஸ்டாலின்
சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில், "இந்தியா" கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது பேசிய ஸ்டாலின், துணை ஜனாதிபதிக்கு தகுதியானவர் சுதர்சன் ரெட்டி தான். தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு மக்களின் உணர்வுக்கும் மதிப்பு அளிக்க கூடியவர். நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் ஆபத்தில் சிக்கி உள்ளது. மக்கள் ஆட்சியை காப்பாற்ற சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டும்" என்று கூறினார்.
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். இதேபோல் இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திராவை சேர்ந்தவரும், முன்னாள் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் தங்களுக்கு ஆதரவு கோரி கூட்டணி கட்சி தலைவர்களிடம் கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் "இந்தியா" கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சென்னை தியாகராயநகரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
சென்னை தியாகராய நடந்த ஆலோசனை கூட்டத்தில் சுதர்சன் ரெட்டி ஸ்டாலினிடம் தனக்கு ஆதரவளிக்குமாறு கோரினார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:-
துணை ஜனாதிபதிக்கு தகுதியானவர் சுதர்சன் ரெட்டி. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு மக்களின் உணர்வுக்கும் மதிப்பு அளிக்க கூடியவர். நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் ஆபத்தில் சிக்கி உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக அத்தனை தீமைகளையும் செய்துவிட்டு முகமூடி அணிந்து பாஜக ஆதரவு கோருகிறது. மக்கள் ஆட்சியை காப்பாற்ற சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டும். தென் மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் ரெட்டியின்
தனது 60 ஆண்டு கால வாழ்க்கையை நீதி, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க அர்ப்பணித்தவர். அரசியல் சாசனத்தை பாதுகாக்க தற்போது சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமுக நடத்திய கருத்தரங்கில் பங்கேற்றவர் சுதர்சன் ரெட்டி. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications