தமிழக கடற்கரைகளில் இருந்து வட கொரியாவிற்கு ஏற்றுமதியான தாது, அணு ஆயுத மூலப்பொருளா? விசாரணை தீவிரம்
சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் ஒரு மணல் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் பிரமாண்ட ரெய்டு நடத்தினர்.
கடற்கரை மணலில் இருந்து தாதுக்களைப் பிரித்து எடுத்து அவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த வகையில் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளது இந்த நிறுவனம்.
இதனால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் இந்த ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

அணு ஆயுத தாதுக்கள்
ஆனால், இது, வருமான வரி தொடர்பான சோதனையாக மட்டும் இல்லை என்கிறார்கள் மத்திய புலனாய்வு பிரிவில் உள்ள சில அதிகாரிகள். வருமான இழப்பு மட்டுமின்றி இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி ஒன்று உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து ஒரு அதிகாரி நம்மிடம் கூறும்போது, "இந்த நிறுவனம் அனுப்பக்கூடிய தாதுக்கள், வெறுமனே உபகரணங்களோ அல்லது வேறு தொழில்நுட்பங்களுக்கோ பயன்படுத்தப்பட்டிருந்தால் பிரச்சினை கிடையாது. ஆனால் யுரேனியம் உள்ளிட்ட சில தாதுக்கள் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படக்கூடியவை என்பதால், கண்காணிப்பு வளையத்திற்குள் இந்த நிறுவனம் வந்துள்ளது" என்கிறார்.

ஆந்திரா வழியாக
அதில் ஒரு அதிகாரி கூறிய தகவல் திடுக்கிடும் ரகம். ஆந்திராவில் உள்ள ஒரு துறைமுகம் வழியாக, தாதுக்கள் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளோம். வடகொரியா ஏற்கனவே அணு ஆயுதத்தை வைத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்களில் கூட விரலைவிட்டு ஆட்டி வருகிறது. இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ள நிலையில் இது போன்ற தாதுக்களை வடகொரியாவுக்கு இந்திய நிறுவனம் ஒன்று அனுப்பியுள்ளது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தக்கூடும். இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறார். அதிகாரிகளுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் வெளியே வராமல் இருந்துள்ளது.

தொடர்புள்ள நிறுவனங்கள்
வெளியே கூறப்பட்டது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் வருமானவரி சோதனை என்பது மட்டும் தானே தவிர, வருமானவரி சோதனை என்பது நிறுவனத்தின் சகோதரர் நடத்தி வரும் மற்றொரு தாது மணல் நிறுவனத்திலும் நடந்துள்ளது என்கிறார்கள் களத்தில் உள்ள அதிகாரிகள். தாதுமணல் அலுவலகங்களை பூட்டி விட்டு அதன் மேலாளர்கள் தலைமறைவாகிவிட்டனராம்.

எஸ்கேப்பான மேனேஜர்கள்
மேலாளர்களை தொடர்புகொள்ள அதிகாரிகள் முயன்றுள்ளனர். ஆனால் மேனேஜராக பணியாற்றியவர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் சொந்த ஊர்களில் இல்லாமல் வேறு எங்கோ தலைமறைவாகியுள்ளனராம். இதனால் சில அலுவலகங்களில் பூட்டை உடைத்து உள்ளே நுழைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications