என்னதிது.. சைலன்டா இருந்த ஜீயர்கள் எல்லாம் இப்படி வயலன்ட்டா பேச ஆரம்பிச்சுட்டாங்களே
Recommended Video
சென்னை: அகிம்சையை வலியுறுத்தி வந்த ஜீயர்கள் தற்போது கலவரத்தை உண்டு செய்யும் அளவுக்கு பேசுகிறார்களே என்று எண்ணத் தோன்றுகிறது.
பொதுவாக எந்த மதத்தின் போதகர்களும் ஒரு உயிரை துன்புறுத்துவது குறித்து பேசவே மாட்டார்கள். பொறுமை, சாந்தி, புண்ணியம் என்ற ரூட்டில் பயணிப்பர்.
ஆனால் தற்போது ஜீயர்கள் எல்லாம் வயலன்ட்டாக பேச தொடங்கிவிட்டார்கள். கடந்த ஆண்டு வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசிய சர்ச்சை பேச்சுக் கூட சில நாட்கள் மட்டுமே இருந்திருக்கும்.

சோடா பாட்டில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பிரஸ் மீட் என்ற பெயரில் பேசினார் பாருங்கள். அவர் பேசும் போது வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும். என கூறி போராட்டம் நடத்தியவர் அவர், ஒரு கட்டத்தில் எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கமல்ஹாசன்
நல்லவற்றை போதிக்கும் ஜீயர் ஒருவர் இப்படி பேசலாமா என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் மன்னார்குடி ஜீயர் ஒருவர் கமல்ஹாசன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜீயர்கள் பேசும் பேச்சா
அவர் பேசுகையில் இந்துக்களை அவதூறாக பேசி வரும் கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம் என ஜீயர் பேசியுள்ளார். அந்த ஜீயர் சோடா பாட்டில் வீசுவோம் என்கிறார். இந்த ஜீயர் நடமாட விட மாட்டோம் என்கிறார். மக்களுக்கு நல்ல கருத்துகளை போதிக்கும் ஜீயர்கள் பேசும் பேச்சா இது.

தவறு
பொதுவெளியில் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என அறிவுறுத்தும் ஜீயர்கள் தங்கள் நாவை அடக்காமல் புதிய சர்ச்சைக்கு வழி வகுப்பது சரியா. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அதற்காக வன்முறையை தூண்டும் தொனியில் யார் பேசினாலும் தவறு தவறுதான் என்பதை உணர வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications