நான் சொன்னதை "இன்று மட்டும் இருந்தால் போதும்" என்று தவறாக புரிந்து விட்டனர்.. ரஜினி மீண்டும் டிவீட்!
என் ட்வீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என ரஜினிகாந்த் விளக்கம் தந்துள்ளார்
சென்னை: நான் ஒன்னும் அப்படி பேசவில்லை.. தவறாக புரிந்து கொண்டார்கள்... 12-14 மணி நேரம் நடமாடாமல் இருந்தாலே 3வது சூழலுக்கு செல்லாமல் தவிர்க்கலாம் என்றுதான் பேசியிருந்தேன் என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்து "மறுபடியும்" ட்விட் போட்டுள்ளார்!
Recommended Video
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றினை ரஜினிகாந்த் அவரது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதில், "12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால், இந்தியாவில் மூன்றாம் நிலை பரவலைத் தடுத்துவிடலாம்" என்ற கருத்தையும், வேறு சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தவறான தகவல்கள் உள்ளதாக கூறி உள்ளதாகவும், தங்களது விதிமுறைகளை மீறி இருப்பதாகவும்கூறி அவரது ட்விட்டர் பக்கங்களில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. ட்விட்டரில் ரஜினிகாந்தை 57 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளதாக தெரிகிறது.
இந்த ட்விட்டர் பதிவை நீக்கியதற்கு யார் காரணம் என்று ரஜினி ரசிகர்கள் குடுமிப்பிடி சண்டையில் சோஷியில் மீடியாவில் இறங்கிவிட்டனர்.. மற்றொரு பக்கம் ரஜினிகாந்த் பதிவு நீக்கத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களில் இறங்கி கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில், தன்னுடைய ட்வீட் தொடர்பாக ரஜினிகாந்த் ஒரு விளக்கம் அளித்துள்ளார்... அந்த விளக்கத்தையும் ட்வீட் மூலமாகவே தெரிவித்துள்ளார். அதில், "நேற்று பதிவு செய்த காணொளியில் 12 -14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு, சூழல் மூன்றாம் நிலைக்குச் செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்ததால், அது, "இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்" என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது.
#IndiaFightsCoronavirus #StayAtHome #StaySafe pic.twitter.com/Jg2dgyuBh6
— Rajinikanth (@rajinikanth) March 22, 2020
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைப் போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாகப் பின்பற்றி இந்த கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம்... இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஆதரித்து மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி" என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இந்த ட்வீட்டினை ரஜினி ரசிகர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்... "நன்றியெல்லாம் எதுக்கு தலைவா.. வீடியோவ நீக்குனதுனால ஆயிரக்கணக்கான வீடியோ Upload ஆகியிருக்கு... நீங்க எது சொன்னாலும் குற்றம் கண்டுபிடிக்கிற காமாலை கண் நோயாளிகளுக்கு அப்படி தான் தலைவா தெரியும். இவனுங்களையெல்லாம் ஒரு மனுஷனாவே மதிக்காதிங்க... நாங்க எப்பவும் உங்களோட இருப்போம்" என்று நம்பிக்கை தந்து வருகின்றனர். மேலும் சிலரோ "அடக்கினா அடங்கிற ஆளா நீ தலைவா.." என்றும் "யாராவது மண்டபத்துல எழுதி கொடுத்ததை படிச்சா இப்படி தான் அசிங்கப்படனும்" என்றும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்!
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications