பிளானே வேற.. "16 வருஷமாச்சு.. வானதிக்கு இதுகூட தெரியாதா".. எகிறிய எம்.பி.. கோவையில் என்ன நடக்கிறது?
வானதி சீனிவாசன் கோரிக்கைக்கு எம்பி நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: 16 வருஷமாகிறது.. இதுகூட வானதிக்கு தெரியாதா? என்று கோவை எம்பி பிஆர் நடராஜன் கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளர்.
பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து சேலம் ரயில்வே கோட்டம் கடந்த 2006ம் ஆண்டு பிரிக்கப்பட்டு விட்டது..
தமிழக அரசு மற்றும் தமிழக எம்பிக்கள், பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாகவே இவை தனியாக பிரிக்கப்பட்டு புதிய சேலம் கோட்டம் அன்று உருவாக்கப்பட்டது...

சேலம் கோட்டம்
இற்த சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற முக்கிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கோவை ரயில் நிலையம் சேலம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டாலும் பொள்ளாச்சி, கிணத்துகடவு போன்ற பகுதிகள் இது வரை சேலம் கோட்டத்தில் இணைக்கப்படவில்லை.. எனவே, இவற்றை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கடந்த 2007 முதல் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வானதி சீனிவாசன்
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வுமான வானதி சீனிவாசன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்விடம் ஒரு மனு அளித்துள்ளார்.. அதில், கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி கோட்டம் உருவாக்கப்பட வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவையை பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும்,

மத்திய அரசு
பொள்ளாச்சி - திருச்செந்தூர் ரயிலை பாலக்காட்டுக்கு பதிலாக கோவை அல்லது மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்பன உட்பட ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும் இந்த கோரிக்கை மனுவை, மற்றும் ரயில்வே அமைச்சருடன் இருக்கும் புகைபடங்களை டிவிட்டரிலும் வானதி சீனிவாசன் அப்லோடு செய்திருந்தார்...

பிஆர் நடராஜன்
இப்படி வானதி மனு தந்ததற்கு, கோவை மாவட்ட எம்பி, பிஆர் நடராஜன் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். ஏற்கனவே கோவை, சேலம் கோட்டத்தில் இருக்கும்போது, தனியாக கோவையை கோட்டம் தேவையா? இது வானதி சீனிவாசனுக்கு தெரியாதா அல்லது அக்கறையின்மையா, விளம்பர எண்ணமா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதுடன், மக்கள் பிரதிநிதி தகவல்களை தெரிந்துகொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

நடராஜன்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறும்போது, கடந்த 2006ஆம் ஆண்டே இவை இணைக்கப்பட்டு விட்ட நிலையில், உண்மை நிலவரம் தெரியாமல் பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவையை பிரிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து மனு அளித்து வந்து இருப்பது வானதி சீனிவாசனின் அறியாமையை காட்டுகின்றது என்றும் பிஆர் நடராஜன் விமர்சித்துள்ளார்.

எதிர்ப்பு குரல்
இதனிடையே, பல்வேறு தரப்பில் இருந்தும் இது தொடர்பான கண்டன குரல்கள் வானதி நோக்கி விழுந்து வருகிறது.. சேலத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களும் ரயில்கள் சென்று வருகிறது, இதில் லட்சக்கணக்கானோர் பயன் பெற்றும் வருகின்றனர்.. அப்படி இருக்கும்போது, கோவையை தலைமையிடமாக கொண்டு கோட்டம் அமைக்க வேண்டும் என்று வானதி சொல்வது, தேவையில்லாத பேச்சு.. கோவைக்கு இன்னமும் முழுமையாக ரயில்வே பாதைகளே கிடையாது.. ஒரு வழிப்பாதையில்தான் ரயில்கள் சென்று வருகின்றன..

தேவையில்லாத வேலை
அப்படியிருக்கும்போது, கோவையை தலைமையிடமாக மாற்றினால் அது பொதுமக்களுக்கு சிக்கலையே ஏற்படுத்தும் என்று வானதிக்கு தெரியதா? எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது, அவரது தொகுதியிலேயே எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது, அதை சீர்செய்வதை விட்டுவிட்டு, இந்த விவகாரத்தை ஏன் தேவையில்லாமல் சீண்டுகிறார்? கோவை டிவிஷனை முன்னிறுத்தி என்ன பிளான் வைத்திருக்கிறார்? என்ற எதிர்ப்பு கேள்விகளும் எழுந்து வருகின்றன..
-
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications