தமிழகத்தி்ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதா?.. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் லோசன முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Widespread rainfall in Tamil Nadu

தற்போது குறைந்துள்ள பருவமழை, 2 நாட்களுக்கு பிறகு, மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில், மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வடமேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது, தென் மேற்கு வங்க கடல் வரை பரவியுள்ளதன் காரணமாக, அடுத்த இரண்டு மூன்று தினங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளில் உருவாகி உள்ள, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+