விக்கிரவாண்டியில் யார்.. அதிமுகவுக்குள் கடும் போட்டா போட்டி.. கடைசியில் இவருக்கு கிடைக்குமோ!
விக்கிரவாண்டியின் அதிமுக வேட்பாளர் யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது
Recommended Video
சென்னை: பாமகவின் பெல்ட்டில் உள்ள.. விக்கிரவாண்டி தொகுதி தேர்தலில் யார் சீட்டை வாங்குவது என்பதில் அதிமுகவுக்குள் கடும் போட்டி எழுந்துள்ளது.
விழுப்புரத்தில் செல்வாக்கு பெற்றவர் முன்னாள் எம்பி லட்சுமணன். ஓபிஎஸ் அணியில் இணைந்து அதிமுகவை உடைத்ததில் பெரும் பங்கு இவருக்கு உள்ளது. அதாவது ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்தான் முன்னாள் எம்பி லட்சுமணன்.

போன முறை எம்பி தேர்தலிலேயே இவர் சீட் கேட்டிருந்தார். ஆனால் அது கிடைக்காமல் போகவும் இந்த முறை எப்படியாவது இடைத்தேர்தலில் ஆவது போட்டியிட வேண்டும் என்று விருப்பமாக இருக்கிறார்.
மற்றொரு புறம் அமைச்சர் சிவி சண்முகம், தன்னுடைய அண்ணன் ராதாகிருஷ்ணனை இங்கு நிறுத்த வெகு ஆர்வமாக இருக்கிறார். விழுப்புரத்தில் தனி கெத்துடன் திகழ்பவர் சிவி சண்முகம். திமுக எம்எல்ஏ மறைந்த உடனேயே, இங்கு எப்படியும் தன் அண்ணனைதான் நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான பூத் ஏஜென்ட் கவனிப்பு வேலைகளிலும் அப்போதே ஈடுபட்டதாக சொல்லப்பட்டது.
தங்களுடைய செல்வாக்கு இங்கு நிறைந்து கிடப்பதால், பாமக இந்த தொகுதியை கேட்டும், சிவி சண்முகம் அதற்கு இடம் கொடுக்கவில்லையாம். இப்போதுவரை தன் அண்ணனுக்காகவே இவர் சீட் கேட்டு வருகிறார். ஆனால் இடைத்தேர்தலில் நிற்க ராதாகிருஷ்ணனுக்கு விருப்பம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
அவருடைய மகனுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு, சிகிச்சையில் இருப்பதால், தேர்தலில் ராதாகிருஷ்ணன் அவ்வளவாக ஆர்வம் காட்டப்படவில்லை என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனாலும் வேட்பாளர் யார் என்பதை நிர்ணயம் செய்வதில் பெரும்பங்கு சிவி சண்முகத்துக்கு இருப்பதாக தெரிகிறது.
ஆனால் எது எப்படி இருந்தாலும்சரி, யார் அதிமுக சார்பில் போட்டியிட்டாலும் சரி.. விக்கிரவாண்டி பாமகவின் பெல்ட்டில் உள்ளது என்பதால், எப்படியும் இதனை வளைத்து போட்டுவிடலாம் என்று பலமாக நம்புகிறது அதிமுக!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications