நடுவில் புக தயாராகும் சசிகலா.. 2வது ஆடியோ கிளப்பிய பரபரப்பு.. ஒன்றிணைவார்களா ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும்?
சென்னை: "அவர்கள் கட்சியில் சண்டையிட்டு கொள்வது வேதனை அளிக்கிறது" என சசிகலா பேசியதாக ஆடியோ வெளியான நிலையில் இனி எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் எந்தவித சண்டையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட்டு கட்சியை தங்கள் வசமே வைத்திருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
ஒரு வேளை இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால் நடுவில் சசிகலா நுழைய வாய்ப்பிருப்பதை புரிந்து கொண்டு இவர்கள் செயல்படுவார்களா, இல்லை இருவரில் யாரேனும் ஒருவர் சசிகலா பக்கம் சாய வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா பேசியதாக நேற்றும் இன்றும் இரு ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் முதல் ஆடியோவில் நான் நிச்சயம் வருவேன். தைரியமாக இருங்கள். கட்சியை சரி செய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள் என சசிகலா பேசியதாக வெளியானது.

சசிகலா
அந்த ஆடியோவில் பேசியது சசிகலாதானா என தெரியவில்லை. இந்த நிலையில் இன்றைய தினமும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. இதில் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். சீக்கிரமே நல்ல முடிவோடு வருகிறேன்.

வேதனை
கட்சிக்குள் அவர்கள் சண்டை போடுவது வேதனையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த இரு ஆடியோக்களில் இரண்டாவதாக வெளியான ஆடியோதான் முக்கியமானது. இதில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி- ஓ பன்னீர் செல்வம் இடையே நடந்து வரும் பனிப்போர் குறித்து அவர் குறிப்பிடுவதாகவே தெரிகிறது.

சசிகலா
இந்த ஆடியோ சசிகலா பேசினாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் இனி ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் மற்ற நிர்வாகிகளும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதையே இந்த ஆடியோ உணர்த்துகிறது. ஒரு வேளை இவர்களுக்குள் சண்டை நடந்தால் கட்சி மீண்டும் உடையும், நடுவில் சசிகலா நுழைந்துவிடுவார்.

சசிகலா கை
பின்னர் கட்சியை அவர் கபளீகரம் செய்து விட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே இனி அதிமுகவில் சண்டையில்லாமல் ஒற்றுமையாக செயல்பட்டால் கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையில் இருக்கும். இல்லாவிட்டால் சசிகலா கைக்கு சென்றுவிடும் என்பது நிதர்சனமான உண்மை.

கடும் விமர்சனம்
எனவே இவர்கள் இனியாவது சண்டையிடாமல் இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லாவிட்டால் இருவரில் ஒருவர் சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்ற போராடுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருவருமே இதுவரை சசிகலாவை நேரடியாக கடுமையாக விமர்சனம் செய்ததில்லை என்பது நினைவுக்கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications