லுங்கியோடு கைதானாரே.. "ராஜவிசுவாசம்".. எடப்பாடியையே மிரள வைத்த புள்ளிக்கு மெகா போஸ்டிங்காமே..!
ஜெயக்குமாருக்கு முக்கிய போஸ்டிங் தர எடப்பாடி முடிவு செய்து வருகிறாராம்
சென்னை: மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்பி பதவி கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது கைநழுவி போயுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுகவின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் லிஸ்ட் ஒருவழியாக வந்துவிட்டது.. இந்த 2 வேட்பாளருக்கே இத்தனை நாளும் குடுமிப்பிடி சண்டை மேலிடத்தில் நடந்து வந்தது.
ஆளுக்கு ஒரு ஆதரவாளர்களுக்கு பதவி தரலாம் என்று ஏற்கனவே முடிவாகி இருந்தாலும், எடப்பாடிதான் நடுவில் புகுந்து, குட்டையை குழப்பிவிட்டார் என்கிறார்கள்..

சாய்ஸ்கள்
தன்னுடைய ஆதரவாளர் 2 பேருக்கும் வழங்க தயாரானார்.. அப்போதுதான் ஓபிஎஸ் உள்ளே புகுந்து மல்லுக்கட்ட ஆரம்பித்தார். இப்போது ஆளுக்கு ஒரு இடம் என்று முடிவாகிவிட்டது.. இதில் எடப்பாடியின் 2 சாய்ஸாக இருந்தது சிவி சண்முகம் மற்றும் ஜெயக்குமார்தான்.. காரணம் இருவருமே பாரபட்சம் இல்லாமல் தங்கள் விசுவாசத்தை எடப்பாடி பழனிசாமிக்கு காட்டி வந்த நிலையில், சிவி சண்முகம் பதவியை தட்டி சென்றார்.

லுங்கியுடன் கைது
இதனால் ஜெயக்குமாரை மேலிடம் கண்டுகொள்ளவில்லை.. அவர் கைதானால்தான் போஸ்டிங் தரவில்லை என்றெல்லாம் சலசலப்புகள் எழுந்து வருகின்றன.. ஆனால், ஜெயக்குமாருக்கு போஸ்டிங் தராததற்கு காரணமே வேறு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. திமுக ஆட்சி ஏற்பட்டதில் இருந்து, ஊழல் தொடர்பான புகார்களில் மட்டுமே அதிமுக மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், குற்ற பின்னணியில் ஜெயக்குமார் கைதானது அதிமுகவுக்கே அதிர்ச்சிதான்.. அதிலும் இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்குள்ளேயே நுழைந்து லுங்கியுடன் கைது செய்ததை எடப்பாடி பழனிசாமியே அதிர்ந்து போய் பார்த்தார்.

ஜெயக்குமார்
காரணம், அதிமுகவின் குரலாய் மட்டுமல்ல, இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமியின் குரலாய் ஒலித்து கொண்டிருப்பவர் ஜெயக்குமார்தான்.. இவர் மீதே கையை வைத்துவிட்டதே திமுக? என்ற ஷாக்கில் இருந்து அதிமுக மேலிடத்தால் வெளிவர முடியாமல் போனது.. எடப்பாடி பழனிசாமி அன்றைய தினம் இரவே கண்டன அறிக்கையையும் காட்டமாக வெளியிட்டார்.. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரை நேரிலும் சந்தித்து நம்பிக்கை தந்தார்... அதிமுகவை திரட்டி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.

எடப்பாடி பழனிசாமி மாஸ்
இவ்வளவும் ஓபிஎஸ் இல்லாமலேயே தனித்து செய்து முடித்தார் என்றால் அதற்கு காரணம் ஜெயக்குமார் மீதான நன்மதிப்புதான்.. அதுமட்டுமல்ல, ஜெயக்குமாரை வைத்து ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்கவும் எடப்பாடி முடிவு செய்துள்ளார்.. அதன்படிதான், அவருக்காக கட்சியின் முக்கிய பொறுப்பை தரலாம் என்று முடிவு யோசித்துள்ளாராம்.. குறிப்பாக, அக்கட்சியின் அவைத் தலைவராக நியமிக்கலாம் என்ற முடிவில் உள்ளாராம்..

தமிழ்மகன் உசேன்
இப்போதைக்கு தமிழ்மகன் உசேன் தற்காலிக தலைவராக உள்ளதால், அந்த பொறுப்பைதான் ஜெயக்குமாருக்கு வழங்கினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்.. கடந்த காலங்களில், சசிகலாவை மிக மோசமாகவும், கடுமையாகவும் விமர்சித்து வந்தது ஜெயக்குமார்தான்.. சசிகலா பெயரை சொன்னாலே, எடப்பாடியே அமைதியாக இருந்தாலும், அவரைவிட அதிகமாக கொந்தளித்தவர் ஜெயக்குமார்தான்.. எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவை சீண்டி ஜெயிலுக்கு போன வரலாறு,

மதுசூதனன்
இப்படி பல காரணங்களால் ஜெயக்குமார் மீதான நன்மதிப்பு எடப்பாடிக்கு அதிகமாகி விட்டதாம். மேலும், இதே பதவியில் அன்று கெத்து காட்டிய வடசென்னை மதுசூதனனை போல், தற்போது ஒட்டுமொத்த சென்னையில் ஜெயக்குமார் ஆக்டிவ்வாக இருப்பதாலும் இந்த பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.. ஆக, எம்பி பதவி இல்லாவிட்டாலும், கெத்து காட்டக்கூடிய முக்கிய ஜெயக்குமாருக்கு ரெடியாக இருக்கிறதாம்.. பார்ப்போம்..!
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications