பிஎஃப் ஓய்வூதியம்.. ரூ.9000 உயர்த்த கோரி பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர்கள் போராட்டம்.. சென்னையில் பரபர
சென்னை: மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரிடம் தங்களது கோரிக்கை மனுவை வழங்க போவதாகவும், இதற்கான உரிய பதில் எங்களுக்கு கிடைக்கும்வரை காத்திருப்பு போராட்டத்தை நடத்த போவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் "பி.எப் 3.0" என்ற திட்டத்தின் மூலமாக கூடுதல் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.. குறிப்பாக, ஏடிஎம் மூலமாக பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தினை எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது... அதுவும் வரப்போகும் புத்தாண்டிலிருந்து இந்த புதிய வசதி அமலாக போகிறது.

ஏற்கனவே இந்த தகவல் வெளியாகியிருந்த நிலையில், சமீபத்தில்கூட ஏடிஎம் இயந்திரம் மூலம் இபிஃஎப்ஓவில் இருந்து பணம் எடுப்பதை மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா உறுதி செய்திருக்கிறார்..
முன்னேற்றங்கள்:
தொடர்ந்து இந்த நடைமுறையில் பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம், அவசர காலங்களில் யாரையுமே எதிர்பார்க்காமல் பிஃஎப் பணத்தை, பயனாளர்களே எளிமையாக எடுத்து கொள்ள முடியும்.
இது ஒருபுறமிருந்தாலும், பிஎஃப் திட்டத்தில் ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர்கள் தங்கள் போராட்டத்தை விரிவுபடுத்தியவாறே உள்ளனர்.. தனியார் தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பொதுத்துறை நிறுவனங்கள்:
தமிழ்நாடு அனைத்து இபிஎப் பென்சனர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், ராயப்பேட்டை இபிஎப் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில், சென்னை இபிஎப் பென்சன் சங்கம், அகில இந்திய இபிஎப் பென்சன் அசோசியேசன், தமிழ்நாடு பென்சன் அசோசியேசன் ஆகிய 3 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை இபிஎப் பென்சன் சங்கத்தின் செயலாளரும், தமிழ்நாடு அனைத்து இபிஎப் பென்சனர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான கே.பி.பாபு தலைமை வகித்தார்...
ஓய்வூதியம்:
செய்தியாளர்களிடம் கே.பி.பாபு சொல்லும்போது, "வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நாடு முழுவதும் 80 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர். இதில் 36 லட்சம் பேர் ரூ.1000-க்கும் குறைவான ஓய்வூதியம் மட்டுமே பெற்று வருகிறார்கள்.. ரூ.4 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள் யாரும் கிடையாது.
ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு வாங்கும் சம்பளத்தில், பாதி சம்பளம் அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியத்தை எங்களுக்கு உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கக்கோரி, 10 வருட காலம் போராடியிருக்கிறோம். இதுகுறித்து, டெல்லி பார்லிமென்ட்டில் 60 எம்பிக்களும் வலியுறுத்தி பேசினார்கள். ஆனாலும், எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை.
கூடுதல் பணம்:
அதேபோல, கூடுதலாக பணம் கட்டினால் கூடுதலாக உயர் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். அதன்படி செலுத்தப்படும் ரூ.6,500 சீலிங் கட்டணத்தை தாண்டி கூடுதலாக பணம் கட்டினால் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது சட்டமாகும். இதற்காக தேசம் முழுவதும் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தும்கூட, வெறும் 16 ஆயிரம் பேருக்கு மட்டுமே உயர் ஓய்வூதியம் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்திலும்கூட, இதற்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 1200 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. 2014க்கு பிறகு பணி ஓய்வு பெற்றவர்கள் கூடுதலாக பணம் கட்டினால் அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கலாம் என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பளித்தும்கூட, இபிஎப் நிறுவனம் தொடர்ந்து அவற்றை எங்களுக்கு இன்னமும் வழங்கவில்லை.
தொடரும் போராட்டம்:
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரிடம் எங்களது கோரிக்கையில் நிறைவேற்ற மனு அளிக்க போகிறோம்.. இதற்கான உரிய பதில் எங்களுக்கு கிடைக்கும்வரை காத்திருப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications