Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரங்கிமலை-வேளச்சேரி இடையே நாளை பறக்கும் ரயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டது. இதனால் சென்னை புறநகர் ரயில்களை நம்பியுள்ள மக்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள். ஒரே ரயிலில் போக முடியாமல் இரண்டு ரயில் மாற வேண்டிய நிலை உள்ளது. வேளச்சேரிக்கு எல்லாம் 3 ரயில்கள் மாற வேண்டியுள்ளளது. இந்நிலையில் பலரும் எதிர்பார்த்த பரங்கிமலை வேளச்சேரி ரயில் வழிததடம் திட்டமிட்டப்படி நாளை தொடங்காது. அனுமதி சான்று கிடைக்காததால் தள்ளிபோகிறது என்கிறார்கள் அதிகாரிகள்.

சென்னை போன்ற ஒரு பெருநகரத்தில், காலையில் அலுவலகம் செல்பவர்களுக்கும், கல்லூரிகளுக்கு விரையும் மாணவர்களுக்கும் 'பறக்கும் ரயில்' என்பது வெறும் போக்குவரத்து வசதி மட்டுமல்ல; அது அவர்களின் வாழ்வாதாரத்தோடு கலந்த ஒரு உணர்வு. கடந்த சில வாரங்களாக எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால், சாமானிய மக்கள் படும் அவதி சொல்லொணாதது.

Will st thomas mount -Velachery mrts train service start tomorrow Officials explanation

இந்நிலையில், மார்ச் 10-ஆம் தேதி (நாளை) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பரங்கிமலை - வேளச்சேரி இடையிலான ரயில் சேவை மீண்டும் தள்ளிப்போயிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏன் இந்தத் தாமதம்?

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக்குமார் கர்க் தலைமையிலான குழுவினர் கடந்த 5-ஆம் தேதி அதிநவீன சோதனைகளை மேற்கொண்டனர். தண்டவாளத்தின் உறுதித்தன்மை, வளைவுகளில் ரயிலின் வேகம், மற்றும் சிக்னல் அமைப்புகளை அவர்கள் ஆய்வு செய்தனர். பரிசோதனைகள் முடிந்துவிட்டாலும், "பாதுகாப்பு அனுமதிச் சான்று" இன்னும் வழங்கப்படவில்லை.

மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ?
மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ?

தண்டவாளத்தில் இன்னும் சில சிறிய அளவிலான சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் முடிக்கப்பட வேண்டியிருப்பதாக ஆய்வுக்குழு அறிவுறுத்தியுள்ளது. "மக்களின் உயிர் பாதுகாப்பு மிக முக்கியம்" என்பதால், இந்தச் சிறிய குறைகளையும் நிவர்த்தி செய்த பிறகே ரயிலை இயக்க அனுமதி கிடைக்கும். இதனால்தான் நாளை தொடங்க வேண்டிய சேவை தற்காலிகமாக முடங்கியுள்ளது.

திருச்சி சிறையில் கம்பி எண்ணும் பெண்.. ஒரே வீடியோவால்.. ஒரே நாளில் தலைகீழான வாழ்க்கை
திருச்சி சிறையில் கம்பி எண்ணும் பெண்.. ஒரே வீடியோவால்.. ஒரே நாளில் தலைகீழான வாழ்க்கை

யாருக்கெல்லாம் இது விடிவுகாலம்?

இந்தச் சேவை தொடங்கப்பட்டால் அது லட்சக்கணக்கான மக்களின் அன்றாடச் சுமையைக் குறைக்கும். ஐடி ஊழியர்கள் & நடுத்தர வர்க்கம்: வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளில் இருந்து சோழிங்கநல்லூர் அல்லது ஓஎம்ஆர் செல்லும் ஐடி ஊழியர்களுக்கும், அங்கிருந்து பரங்கிமலை வழியாக சென்ட்ரல் செல்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். கிண்டி மற்றும் பரங்கிமலை சுற்றியுள்ள கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து நெரிசலில் சிக்காமல், குறித்த நேரத்திற்குத் தேர்வுகளுக்குச் செல்ல இந்த ரயில் உதவும். எழும்பூர் மற்றும் சென்ட்ரல் பகுதியில் இருந்து பொருட்களை வாங்கி வரும் சிறு வியாபாரிகளுக்கு, போக்குவரத்துச் செலவு பெருமளவு குறையும்.

மக்களின் உணர்வுப் போராட்டம்

வெயிலில் மணிக்கணக்கில் பேருந்துக்காகக் காத்திருப்பது, போக்குவரத்து நெரிசலில் சிக்கி அலுவலகத்திற்குத் தாமதமாகச் செல்வது என சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாகவே இருக்கிறது. "நாளை முதல் ரயில் வரும்" என்று ஆவலோடு காத்திருந்த முதியவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்தத் தாமதம் ஏமாற்றத்தை தந்துள்ளது ஆனாலும், பாதுகாப்புதான் முக்கியம் என்பதால் அதிகாரிகள் இந்தப் பணிகளை விரைந்து முடிப்பார்கள் என்று நம்புகிறாரகள்.

தண்டவாளத்தில் அந்தச் சிறு சிறு திருத்தங்கள் முடிந்தவுடன், பரங்கிமலை - வேளச்சேரி இடையே ரயில் பயணம் இனிதாகும். 18 வருடம் காத்திருந்த மக்கள், அடுத்த சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது திறக்கப்பட்டால் சென்னையின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் ஒரு வலிமையான பாலமாக அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+