"சாதி கோஷம்.." ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்!
புதிய பதவி கேட்டு வருகிறாராம் அமைச்சர் சிவி சண்முகம்
சென்னை: சாதி கோஷம் அதிமுகவில் கிளம்பி உள்ளது.. அந்த வகையில் முக்கிய பதவிக்கு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விரைவில் ஜாக்பாட் அடிக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால் அதற்கு குறுக்கே சிவி சண்முகம் இருப்பாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு உடம்பு சரியில்லை.. ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கிறார்..உடல்நிலை ரொம்பவும் மோசமடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர் உயிரை காப்பாற்ற முடியாமல் டாக்டர்கள் தினமும் போராடி வருகின்றனர்.
அவர் ஆஸ்பத்திரியில் உள்ளதால், அவரது இலாகா பணிகள் அப்படி அப்படியே தேங்கி உள்ளன.. எந்த ஃபைலும் நகரவில்லை.. அதனால், அந்த பதவியை இப்போதைக்கு யாரிடமாவது ஒதுக்க எடப்பாடி அரசு யோசித்து வருகிறது. ஆனால், மிக சரியான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்கவும் முயன்று வருகிறது.. காரணம், வேளாண் சட்டங்கள், நெல் கொள்முதல் விவகாரம் என நிறைய பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்துள்ளன.
இதையெல்லாம் சமாளிக்க கூடியவரை நியமனம் செய்ய வேண்டும் என்பதால் யோசனை நடந்து வருகிறது. இந்த சமயத்தில் துரைக்கண்ணுவின் பதவி தனக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் முயன்று வருகிறார்.. அதற்கு அவர் சொல்லும் காரணம், துரைக்கண்ணு வன்னியர் சமுதாயம் என்பதால், இன்னொரு வன்னிய சமூக அமைச்சருக்குத்தான் தர வேண்டும் என்பது சிவி சண்முகம் எடுத்து வைக்கும் நியாயம்.
நீட் தேர்வு முடிவு வந்தாச்சு.. ஏன் லேட்.. மனசாட்சிப்படி முடிவெடுங்க.. ஆளுநருக்கு ஹைகோர்ட் அறிவுரை!
ஆனால், டெல்டா மாவட்ட அமைச்சரின் பதவியை, அதே டெல்டாவை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்குவதுதான் சரியாக இருக்கும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காமராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இவர்களில் யாராவது ஒருத்தருக்கு ஒதுக்கலாம் என்பதே ஒரு சில சீனியர் அமைச்சர்களின் எடுத்து வைக்கும் நியாயம்..
இதில் காமராஜ் அல்லது விஜயபாஸ்கர் பெயர் லீடிங்கில் உள்ளதாம்.. இதையடுத்து, சிவி சண்முகமா? விஜயபாஸ்கரா? காமராஜா? இவர்களில் யாருக்கு அந்த பதவி தற்காலிகமாக தரப்படுகிறது என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.