கண் நிறைய மை.. ஃபுல் மேக்கப்.. இவர்தான் மீனா.. கவர்ச்சி பேச்சு.. இப்ப கம்பி எண்ணிட்டிருக்கார்!
மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
சென்னை: ரெட் கலர் சுடிதார், கண் நிறைய மை என ஃபுல் மேக்-அப்பில் இருக்கிறாரே.. இவர்தான் மீனா.. கவர்ச்சியாக பேசியே தன் வலையில் விழ வைத்துவிடுவாராம்! இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்!
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் பல்கியா பேகம் 25, முகப்பேரை சேர்ந்தவர் பிரவீன 24, வேளச்சேரியை சேர்ந்தவர் சந்துரு 26, இவர்கள் 3 பேரும் வடக்கு கடற்கரை போலீசில் ஒரு புகார் அளித்தனர்.
அதில், "நாங்கள் ஒரு ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து, மண்ணடி பகுதிக்கு சென்றோம். அங்கிருந்த அந்த ஆபீசில் சாலிகிராமத்தை சேர்ந்த மீனா என்ற 32 வயது பெண்ணும், மண்ணடியை சேர்ந்த சங்கர் என்ற 35 வயது நபரும் இருந்தனர்.

ஆதார் கார்டு
அவர்கள், "உங்களுக்கு லோன் வாங்கி தருகிறோம். உங்களிடம் உள்ள எல்லா ஆவணங்களும் எங்களிடம் தர வேண்டும்" என்றனர். இதனால் நாங்கள் எங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை தந்தோம்.. அவர்களும் அதை வாங்கி கொண்டு, இன்னும் கொஞ்ச நாளில் உங்கள் பேங்க் கணக்கில் லோன் பணம் வந்துவிடும் என்றனர். ஆனால் பணம் வரவே இல்லை.

ஆவணங்கள்
இந்த சமயத்தில், கடை ஊழியர்கள் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டனர். "டிவி, வாஷிங் மிஷின் வாங்கியதற்கான தவணை பணத்தை கட்டுமாறு சொன்னார்கள். அப்போதுதான், எங்களது ஆவணங்களை காண்பித்து கடைகளில் வாஷிங் மிஷின், பிரிட்ஜ், லேப்டாப், டிவி, ஐபோன் வாங்கி மோசடி செய்த விவகாரமே எங்களுக்கு தெரிய வந்தது. அதனால் நாங்கள் மண்ணடி ஆபீசுக்கு உடனே சென்றோம்.

விசாரணை
ஆனால், ஆபீஸ் இருந்தது. இப்படி லோன் வாங்கி தருவதாக ஆவணங்களை பெற்று மோசடியும் செய்த 2 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டனர். இது சம்பந்தமாக விசாரணை நடந்தபோதுதான், மீனாவும், சங்கரும் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

புழல் சிறை
இப்படி ஆன்லைனில் லோன் வாங்கி தருவதாக கூறி ஆவணங்களை பெற்றுக் கொண்டு அதில் தவணை முறையில் இவர்கள் வீடு உபயோகப்பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இந்த ஆபீஸ் நடத்தியது மீனாதான்.. இவருக்கு உதவியாக இருந்தது சங்கராம்.. இப்படியே இருவரும் 8 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். இப்போது மீனாவும், சங்கரும் புழலில் உள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications