பூந்தமல்லி ரோட்டில்.. வெட்டிய திருடன்.. கையில் ரத்தம் கொட்டியும்.. விடாமல் பிடித்த தைரியலட்சுமி!
அரிவாள் வெட்டிலும் கொள்ளையனை பெண் ஒருவர் விரட்டி பிடித்துள்ளார்
சென்னை: பூந்தமல்லி ரோட்டில் தனலட்சுமியை பார்க்கணுமே.. தன் கையில் ரத்தம் சொட்ட சொட்ட திருடனை விடாமல் கெட்டியாக பிடித்து கொடுத்த சம்பவம் நடந்துள்ளது!
காட்டுப்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் டிவி சீரியல் படப்பிடிப்பு தளத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
வழக்கம்போல வேலை முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் தனலட்சுமி. ஆனால் அவரை ரொம்ப நேரமாகவே யாரோ ஒருவர் பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்கிறார்.

செயின்
பிறகு திடீரென்று தனலட்சுமி கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் தனலட்சுமி சுதாரித்து கொண்டார். அதனால் செயினை கெட்டியாக பிடித்து கொண்டார். விடவே இல்லை.. செயினை விடாமல் பிடித்து கொண்டதால் ஆத்திரமடைந்த அந்த திருடனோ திடீரென பாக்கெட்டில் ரெடியாக வைத்திருந்த அரிவாளை எடுத்து தனலட்சுமியை கையில் ஒரே வெட்டு வெட்டினார்.

ரத்தம் கொட்டியது
இப்படி ஒரு அரிவாள் வெட்டினை எதிர்பார்க்காத தனலட்சுமி வலியால் கத்தினார். ரத்தம் கையில் கொட்டியது. ஆனாலும் தனலட்சுமி விடவில்லையே.. திருடனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டார். அவர் அங்கிருந்து தப்ப முயன்றும் விடாமல் இறுக்கமாக பிடித்து கொண்டு திருடன், திருடன் என அந்த வலியிலும் அலறினார். அந்த சத்தத்தை கேட்டதும், அங்கிருந்த சிலர் ஓடிவந்து திருடனை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் கொண்டு போய் ஒப்படைத்தனர்.

மிளகாய்பொடி
திருடன் பெயர் சிவக்குமார், அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. பத்திரிகையாளர் அடையாள அட்டையை அவராகவே போலியாக தயாரித்து வைத்திருந்தார். தன்னுடைய பைக்கிலும் பிரஸ் என்று ஒட்டி வைத்துள்ளார். அந்த பைக்கில் கத்தி, மிளகாய்ப்பொடி என்று ஒரு களவாணிதனத்துக்கு தேவையான எல்லா பொருட்களையும் வைத்திருக்கிறார்.

தெருவிளக்கு
தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருட்டு முயற்சி நடந்த பகுதியில் எப்பவுமே லைட் எரிந்து கொண்டுதான் இருக்குமாம். ஆனால் எப்போதெல்லாம் திருட்டு சம்பவம் நடக்கிறதோ அப்போதெல்லாம்தான் லைட் எரிவது இல்லையாம். இதை பற்றி நிறைய புகார் மின்வாரியத்துக்கு அளித்தும், எல்லாம் சரியாத்தான் இருக்கிறது, ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

விசாரணை
கடைசியில் பார்த்தால், இந்த சிவக்குமார்தான் அந்த பகுதி லைட்டை ஆஃப் பண்ணி விடுவதாம். திருட்டுக்கு தயார் ஆகிவிட்டால் ஓடிபோய் லைட் ஆப் பண்ணிவிடுவாராம், இதெல்லாம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போது சிவக்குமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications