Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோழி வீட்டுக்குள் சைலண்ட்டாக வந்த டிஎஸ்பி.. மறு நிமிடம் அதிர்ச்சி சம்பவம்.. வீடியோவில் அந்த உருவம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் தங்கத்தின் விலை என்பது உச்சத்தில் உள்ளது.. நடுத்தர மக்களால்கூட தங்கம் வாங்க முடியாத சூழ்நிலை இன்று வந்துள்ளது.. இப்படியொரு நெருக்கடியான சூழலில், ஏற்கனவே அரும்பாடுபட்டு சேர்த்து வைத்த நகைகளை திருடுவதும் அதிகரித்து வருகின்றன. அதேபோல கொள்ளை சம்பவங்களும் பெருகி வருகின்றன.. ஒரு பெண் அதுவும் காவல்துறை அதிகாரி இப்படியொரு கொடுமையான சம்பவத்தை செய்து, அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் கல்பனா ரகுவன்ஷி.. இவருக்கு 56 வயதாகிறது.. ஜஹாங்கிராபாதில் துணை காவல் ஆய்வாளராக அதாவது டிஎஸ்பியாக வேலை பார்த்து வருகிறார்.

Woman DSP Close friend Video

தோழி வீட்டில் கைவரிசை

கல்பனாவின் நெருங்கிய தோழி பிரமிளா திவாரி.. இவர்கள் பல வருட காலமாகவே நெருக்கமான நட்பில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 24ம் தேதி பிரமிளா வீட்டுக்கு கல்பனா வந்திருக்கிறார். கல்பனா குளித்து கொண்டிருந்தபோதே, பிரமிளாவின் பர்ஸிலிருந்து ரூ. 2 லட்சம் பணம் மற்றும் செல்போனை திருடி கொண்டு சென்றுவிட்டார் கல்பனா.

குளித்துவிட்டு வந்து பர்ஸை பார்த்தபோதுதான், பணம், செல்போன் காணாமல் போனது பிரமிளாவுக்கு தெரியவந்துள்ளது.. தன்னுடைய மகளின் ஸ்கூல் பீஸ் கட்டுவதற்காக அந்த பணத்தை பிரமிளா பர்ஸில் வைத்திருந்தாராம்.

தோழி பர்ஸில் பணம்

உடனே அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது, கல்பனா கையில் பணக்கட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.. அப்போதுதான் தோழி தன்னுடைய வீட்டுக்கு வந்து சென்றதே பிரமிளாவுக்கு தெரியவந்துள்ளது.

உடனே கல்பனாவுக்கு போனை போட்ட பிரமிளா, திருடியவற்றை எல்லாம் திருப்பி தந்துவிடுமாறு கேட்டுள்ளார்... இதை சிறிதும் எதிர்பார்க்காத கல்பனா, செல்போன் மட்டும் பிரமிளாவிடம் திருப்பி தந்தாராம். பணத்தை தரவில்லையாம்.

எனவே, தன் மகளுக்காக பள்ளிக் கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை திருடியதாக, கல்பனா மீது காவல் நிலையத்தில் பிரமிளா புகார் அளித்தார். போலீசாரும் விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு, டிஎஸ்பி கல்பனா மீது திருட்டு வழக்கை பதிவு செய்தனர்.

வீடியோவில் பெண் டிஎஸ்பி

தானே ஒரு டிஎஸ்பி என்பதால், தன்னுடைய தோழி பிரமிளா, எக்காரணம் கொண்டும் போலீசுக்கு போக மாட்டார் என்று கல்பனா நினைத்திருந்தார்.. தன் மீது போலீசார் திருட்டு வழக்கை பதிவு செய்யவும், உடனே கல்பனா தலைமறைவாகி விட்டாராம். இதையடுத்து கல்பனாவை பிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.. இதனிடையே கல்பனா திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரமிளாவுக்கு 35 வயதாகிறது.. எல்ஐசியில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது வீடு போபாலின் ஜஹாங்கிராபாத் பகுதியில் உள்ளது. சம்பவத்தன்று தன்னுடைய வீட்டுக்கு கல்பனா வந்தது இவருக்கு தெரியாதாம். குளித்து கொண்டிருந்த நேரத்தில் நைசாக வந்து சென்றுள்ளார்.

சார்ஜரில் காஸ்ட்லி செல்போன்

பர்ஸில் உள்ள பணமும், சார்ஜில் போட்டியிருந்த செல்போனும் மாயமாகி இருந்ததால், உடனே போலீசுக்கு புகார் செய்திருக்கிறார்.. போலீசார் நேரடியாகவே பிரமிளா வீட்டுக்கு வந்து, அங்கிருந்த சிசிடிவியை ஆராய்ந்தபோதுதான், கல்பனாவின் உருவம் அதில் பதிவாகியிருந்தது,.

டிஎஸ்பி கல்பனா, பணம், செல்போனுடன் வெளியேறுவதும் அதில் பதிவாகியிருந்தது. இப்போது இப்போது பெண் டிஎஸ்பி கல்பனாவை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+