தாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்த இளம் பெண்
சென்னை: தாய் திட்டியதால் சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்த இளம் பெண படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை நியூ ஆவடி ரோடு பகுதியில் வசித்து வருபவர் புஷ்பா (23). இவருக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. புஷ்பா கணவரை பிரிந்து வந்து தாயுடன் கடந்த ஒரு வருடமாக வசித்து வருகிறாராம்.

இந்நிலையில் புஷ்பா அவரது தாய் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அவரது தாயார் திட்டியதால் புஷ்பா மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்நிலையில் நேற்று இரவு வில்லிவாக்கம் பாடி மேம்பாலத்துக்கு சென்ற புஷ்பா திடீரென கீழே குதித்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓடிச் சென்று புஷ்பாவை பார்த்தனர். அப்போது அவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி இருந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு புஷ்பாவை அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்க ஆபத்தான நிலையில் இருக்கும் புஷ்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.தாய் திட்டியதால் இளம் பெண் பாடி மேம்பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications