கல்லறையில் மயங்கி விழுந்த நபர்.. தோளில் தூக்கிப்போட்டு மீட்ட பெண் இன்ஸ்பெக்டர்.. கமல்ஹாசன் பாராட்டு
மயங்கி விழுந்த நபரை காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டருக்கு கமல் வாழ்த்து கூறியுள்ளார்
சென்னை: "சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது" என்று மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி. சத்திரம் கல்லறையின் ஊழியர் உதயா.. இவர் கனமழை காரணமாக கல்லறையிலேயே நேற்றிரவு தங்கியுள்ளார்..
தொடர்ந்து மழையில் நனைந்து கொண்டும் இருந்துள்ளார்.. இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.. அப்படியே நிலைகுலைந்து மயங்கி கல்லறையிலேயே விழுந்துள்ளார்.

அதிர்ச்சி
இன்று காலையில், இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் மரம் விழுந்ததினாலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக கருதி, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்... இதையடுத்து டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு விரைந்து வந்து பார்த்தபோதுதான், உதயாவுக்கு உயிர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உதயாவை தன்னுடைய முதுகில் தூக்கிக் கொண்டு நடந்து வந்து, ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்... உதயாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.

தண்ணீர்
இதுகுறித்து ராஜேஸ்வரி சொல்லும்போது, "இன்று காலை ஷெனாய் நகர் கல்லறைக்கு அருகே, ஒருவர் இறந்துகிடப்பதாக தகவல் வந்தது... தண்ணீரில் உடல் முழுவதும் ஊறிய நிலையில் மிதந்து கொண்டிருந்த அவரை நான் மீட்டேன்... சம்பந்தப்பட்ட நபர், குடிபோதையில் அங்கிருந்த மரத்தின் அடியில் படுத்திருந்திருக்கிறார். சுயநினைவு இல்லாமல், தண்ணீரிலேயே ஊறிப்போய் மயங்கி விழுந்துள்ளார்.

சுயநினைவு
உடல் விறைத்து சுய நினைவு இல்லாமல் இருந்த அவரை தண்ணீரில் இருந்து தூக்கும்போது, இறந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன்... ஆனால், முதலுதவிகள் செய்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது... பிறகு, அவரை தூக்கி என் தோள்பட்டையில் வைத்துக்கொண்டு ஓடி வந்து, அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தேன்" என்றார் ராஜேஸ்வரி.

கமல்
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.. அந்த வகையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார்.. அதில், "சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரை காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications