Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரம் விழுந்து உயிரிழந்துவிட்டதாக கருதப்பட்ட நபர்! தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்!

மயங்கி விழுந்த ஊழியரை தோளில் சுமந்து, ஆட்டோவில் ஏற்றியுள்ளார் பெண் இன்ஸ்பெக்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழ்ப்பாக்கம் கல்லறையில் மரம் விழுந்து பலியாகிவிட்டதாக கருதப்பட்ட இளைஞரை தோளில் சுமந்து மருத்துவமனையில் அனுமதிக்க உதவியதுடன், அவரது உயிரையும் காப்பாற்றி உள்ளார் பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி.. இதையடுத்து அவரது நெகிழ்ச்சி செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Recommended Video

    உயிருக்கு போராடிய இளைஞரை தோளில் சுமந்து சென்ற பெண் Inspector Rajeshwari

    தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.. இன்று மாலைதான் புயல் கரையை கடக்க போகிறது.. தொடர்ந்து கனமழை இருக்கும் என்றும் எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.

    இதில் அதிக அளவு சென்னை பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.. கடந்த 4 நாட்களாகவே மீட்பு பணியின் பிடியில் சென்னை உள்ளது.. 4 நாட்களுமே தமிழக முதல்வர் நேரடி ஆய்வில் உள்ளார்..

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    அதிகாரிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், மாநகராட்சி ஊழியர்கள், என மொத்த பேரும் களத்தில் இறங்கி, மக்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் தரப்பட்டு வருகிறது.. அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி.சத்திரமும் மழை பாதிப்புக்கு உள்ளான பகுதியாகும்..

     குடியிருப்பு பகுதிகள்

    குடியிருப்பு பகுதிகள்

    இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் மழைநீர் அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதனால், குடியிருந்த மக்கள் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில், அண்ணா நகர் எம்எல்ஏ எம்.கே.மோகன் நிவாரண உதவிகளை வழங்கினார்.. அதேபோல, கனமழையால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியை தயாநிதி மாறனும் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

    கல்லறை

    கல்லறை

    இந்நிலையில், டி.பி. சத்திரம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறையிலேயே நேற்றிரவு தங்கியுள்ளார்.. தொடர்ந்து மழையில் நனைந்து கொண்டும், இருந்துள்ளார்.. இதனால் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது.. இதில் நிலைகுலைந்து மயங்கி கல்லறையிலேயே விழுந்துள்ளார் உதயா. அவருக்கு ஏற்கனவே வலிப்பு நோயும் இருப்பதாக கூறப்படுகிறது.. அதேசமயம், நேற்றிரவு கல்லறை பகுதியில் நிறைய மரங்களும் முறிந்து விழுந்துள்ளன..

     சிகிச்சை

    சிகிச்சை

    இந்நிலையில், இன்று காலையில், இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள், அதிர்ச்சி அடைந்து, அவர் மரம் முறிந்து விழுந்து இறந்துவிட்டதாக கருதி, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்... இதையடுத்து, டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு விரைந்தார். அங்கு உதயாவை சுற்றிலும் முறிந்து விழுந்திருந்த மரங்களின் கிளைகளை அகற்றி, உதயாவை மீட்டார்... அப்போதுதான் உதயாவுக்கு உயிர் இருப்பதும், அவர் மயக்கத்தில்தான் இருக்கிறார் என்பதும் தெரியவந்தது..

    பாராட்டுக்கள்

    பாராட்டுக்கள்

    இதையடுத்து, உதயாவை தனது தோளிலே தூக்கிக்கொண்டு கீழ்ப்பாக்கம் கல்லறையில் இருந்து வெளியே வந்தார் ராஜேஸ்வரி.. அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இறந்துவிட்டதாக கருதப்பட்ட நபர் உயிருடன் இருப்பதை அறிந்து, மருத்துவமனைக்கு அனுப்பி உயிரையும் காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் இந்த நெகிழ்ச்சி செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+