போராட்டத்தின் போது ரயில்களுக்கு தவறான சிக்னல்.. மெட்ரோ நிர்வாகம் பகீர் புகார்.. மூவர் சஸ்பெண்ட்
சென்னை: நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தின் போது மெட்ரோ ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறி, மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்தின் போது சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விதிகளை மீறி சங்கம் அமைத்ததாகவும், பணியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டி மெட்ரோ ஊழியர்கள் 8 பேரை 2 நாட்களுக்கு முன் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை கண்டித்தும் மீண்டும் அவர்களை பணியில் சேர்க்க கோரியும் கடந்த திங்கட்கிழமை மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்பட பல்வேறு நிலையங்களில் சிறிது நேரம் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்
இந்நிலையில் இவ்விகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையினை திட்டமிட்டு நிறுத்தியதாக மூன்று ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மெட்ரோ ரயில் ஊழியர்கள் மனோகரன், பிரேம்குமார், சிந்தியாரோஷன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தின் போது இவர்கள் மூவரும் மெட்ரோ தலைமைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, அப்போது பாதைகளில் இயங்கி வந்த மெட்ரோ ரயில்களுக்கு தவறான மற்றும் ஆபத்தான சிக்னல்களை அளித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications