நிர்வாணப்படுத்தி... கல்லாலேயே அடித்து... கறிகடை முனுசாமி கொடூர கொலை.. மிரண்ட மதுரவாயல்!
இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்
சென்னை: கறிகடையில் வேலைபார்க்கும் முனுசாமியின் தலையில் யாரோ கல்லை போட்டு கொன்று விட்டார்கள். யார் கொன்றார்கள் என தெரியவில்லை.. நிர்வாணமான நிலையில் கிடந்த முனுசாமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Recommended Video
சென்னை அடுத்த மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் பலராமன் தெரு பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனால் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.. மிக கோரமான முறையில் நபர் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு, அந்த சடலத்தையும் மீட்டனர்.
விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பதும் அவருக்கு 30 வயது என்பதும் தெரியவந்தது.. கோழி, கறி கடையில் வேலை செய்து வந்துள்ளார்.. தினமும் தண்ணி அடிப்பாராம்.
நேற்றிரவும் நண்பர் ஒருவருடன் மது அருந்த சென்றிருக்கிறார்.. ஆனால் திரும்பி வீட்டுக்கு வரவே இல்லை என்று உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் முனுசாமியுடன் மது அருந்த சென்ற நபர் யார்? முனுசாமியை அவர்தான் கொலை செய்தாரா அல்லது வேறு யாரும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால் சம்பவத்தின்போது, அவருடன் மேலும் 3 நண்பர்களும் சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. அப்போது அவர்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது.. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், முனுசாமியை அடித்து, உதைத்து நிர்வாணமாக்கியுள்ளனர்.. அதன் பிறகுதான் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுபோக அப்பகுதி சிசிடிவி கேமிராக்களை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. உடல்சிதைந்த நிலையில் இளைஞரின் சடலத்தை இன்று காலையில் அந்த பகுதி மக்கள் பார்த்து அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது!












Click it and Unblock the Notifications