வயசு 19.. கையில் காசு இல்லையாம்.. பைக் அருகே வந்து நைஸாக.. தாவி வந்து பிடித்த யாசர் அராபத்
சென்னையில் பைக் திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: "கையில காசு இல்லை.. அதனாலதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு" என்று 19 வயது பெண் போலீசில் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வசிப்பவர் யாசர் அராபத். இவர் தன் வீட்டு வாசலில் எப்போதும் தன் பைக்கை நிறுத்தி வைப்பார். நேற்று முன்தினம் இரவும் அப்படித்தான் பைக் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்து சாப்பிட்டார்.. பிறகு எதேச்சையாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது 2 பெண்கள் தன் பைக் பக்கத்தில் நிற்பது தெரிந்தது.. பிறகு கள்ளசாவி போட்டு பைக்கை திருடி கொண்டும் முயன்றனர்.. இதனால் பதறியடித்து கொண்டு வெளியே வந்தார்.. அதற்குள் பெண்கள் தப்பி ஓட முயன்றனர்.
இதில் விரட்டி சென்று ஒருவரை பிடித்துவிட்டார்.. இன்னொருவரை பிடிக்க முடியவில்லை.. இதையடுத்து அந்த பெண்ணை திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்து புகார் தந்தார். அதன்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
பசுமை நிறைந்த நினைவுகளே...பாடி திறிந்த பறவைகளே... ரீவைண்ட் செய்த ஸ்டாலின்
சம்பந்தப்பட்ட பெண்கள் திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியை சேர்ந்தவர்கள்.. சிக்கிய பெண்ணின் பெயர் சந்தியா, வயசு 19, இன்னொரு பெண்ணின் பெயர் மோனிஷா.. 20 வயதாகிறது.. இவர் தப்பி ஓடிவிட்டாராம்..
போலீசாரிடம் 19 வயது சந்தியா சொல்லும்போது, "நாங்க 2 பேரும் ஃபிரண்ட்ஸ்.. ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனில் பூ விற்று வந்தோம்.. அப்போது கஞ்சா விற்றோம்.. எங்களுக்கும் போதை பழக்கம் இருக்கு.. நியூ இயர் வந்துவிட்டது.. செலவுக்கு பணம் இல்லை..மோனிஷா சொன்னதால்தானே பைக்கைத் திருட வந்தேன்" என்றார். இப்போது மோனிஷாவை போலீசார் தேடி வருகிறார்கள்.