சீமானுக்கு வாக்களிப்பது ஆபத்து.. ஏமாந்த இளைஞர்களே வாக்களிக்கிறார்கள்.. செல்வப்பெருந்தகை பேட்டி!
சென்னை : நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக கூட்டணிக்கு 292 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 232 இடங்களும் கிடைத்துள்ளன. இதனால் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவோடு பாஜக மீண்டும் ஆட்சியமைக்க திட்டமிட்டு வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய எழுச்சியை கண்டுள்ளது.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதோடு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 10 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர். 2019ஆம் ஆண்டு 5.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற நரேந்திர மோடி, இப்போது 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றுள்ளார்.
ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி பேசும் போது காசி, வாரணாசி குறித்தே பேசி வந்தார். அப்படி பேசியும் வாரணாசி தொகுதியில் 4.5 லட்சம் மக்கள் நிராகரித்துள்ளனர். இந்தியா முழுவதும் இதே நிலை தான் உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 மணிக்கு மேல் தாமதப்படுத்தியதற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. அதேபோல் கருத்துக் கணிப்புகளை யாரும் வெளியிடாமல் கருத்து திணிப்புகள் வெளியாகின.
அதேபோல் தமிழ்நாட்டில் பாஜக வாங்கிய வாக்குகள் பாமகவிற்கு சொந்தமானது தான். இங்கு பாமகவிற்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. இங்கு 7 முதல் 8 சதவிகிதம் வாக்கு வங்கி வைத்துள்ளார்கள். பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது. வன்னியர்கள் அதிகமிருக்கும் பகுதிகள் வாக்குகள் பெற்றுவிட்டு 2வது இடத்திற்கு வந்திருப்பதாக கூறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதற்கு பாமக தான் காரணம்.
அதேபோல் நாம் தமிழர் கட்சிக்கு ஏமாந்த இளைஞர்கள் வாக்களிப்பது ஆபத்தான விஷயம். அவர் ஒரு பிரிவினைவாதி தான். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான் என்று தெரிவித்துள்ளார். இந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தமாக 8.19 சதவிகித வாக்குகளை பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி?












Click it and Unblock the Notifications