Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூரில் அக்காவிடம் தவறாக நடக்க முயற்சி.. போலீஸ் ஸ்டேசன் வாசலில் ஆடிட்டரை அடித்தே கொன்ற தம்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூரில் அக்காவிடம் தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரம் அடைந்த தம்பி, தனியார் நிதி நிறுவன ஆடிட்டரை மகளிர் போலீஸ் நிலையம் எதிரே அடித்துக்கொலை செய்தார். இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் கண்ணதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்த 48 வயதாகும் ராபர்ட், திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வனிதா (43). இவர்களுக்கு யஸ்வந்த் (12) என்ற மகனும், அஸ்வினி (4) என்ற மகளும் உள்ளனர்.

Youth arrested for beating auditor to death in front of Thiruvallur Women s Police Station

நேற்று காலை காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த நிறுவனத்தில் 25 வயது இளம்பெண் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 'லிப்டில்' வந்த அந்த பெண்ணிடம், ராபர்ட் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த பெண், திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை 5 மணிக்கு ராபர்ட்டை நேரில் வரவழைத்து விசாரித்துள்ளனர். விசாரணைக்கு பிறகு இரவு 7 மணிக்கு போலீசார் ஆடிட்டர் மற்றும் பெண்ணை சமரசம் செய்து அனுப்பினர்.

இதனிடையே ஆடிட்டர் ராபர்ட், திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது தவறாக நடக்க முயன்றாக புகார் அளித்த பெண்ணும் வந்துள்ளார். அப்போது புகார் அளித்த இளம் பெண்ணின் தம்பி மவுலி (23) என்பவர், "எனது அக்காவிடம் தவறாக நடக்க முயன்றாயா?" என ஆவேசமாக ஆடிட்டர் ராபர்ட்டின் தலையில் கையால் தாக்கினாராம். இதில் ஏற்கனவே உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ராபர்ட் நிலை தடுமாறி மயங்கி சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து ராபர்ட் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராபர்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மவுலியை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அக்காவிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டி போலீஸ் ஸ்டேசன் வாசலில் ஆடிட்டரை பெண்ணின் தம்பி அடித்தே கொன்ற சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+