திருவள்ளூரில் அக்காவிடம் தவறாக நடக்க முயற்சி.. போலீஸ் ஸ்டேசன் வாசலில் ஆடிட்டரை அடித்தே கொன்ற தம்பி
சென்னை: திருவள்ளூரில் அக்காவிடம் தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரம் அடைந்த தம்பி, தனியார் நிதி நிறுவன ஆடிட்டரை மகளிர் போலீஸ் நிலையம் எதிரே அடித்துக்கொலை செய்தார். இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் கண்ணதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்த 48 வயதாகும் ராபர்ட், திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வனிதா (43). இவர்களுக்கு யஸ்வந்த் (12) என்ற மகனும், அஸ்வினி (4) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று காலை காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த நிறுவனத்தில் 25 வயது இளம்பெண் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 'லிப்டில்' வந்த அந்த பெண்ணிடம், ராபர்ட் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த பெண், திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை 5 மணிக்கு ராபர்ட்டை நேரில் வரவழைத்து விசாரித்துள்ளனர். விசாரணைக்கு பிறகு இரவு 7 மணிக்கு போலீசார் ஆடிட்டர் மற்றும் பெண்ணை சமரசம் செய்து அனுப்பினர்.
இதனிடையே ஆடிட்டர் ராபர்ட், திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது தவறாக நடக்க முயன்றாக புகார் அளித்த பெண்ணும் வந்துள்ளார். அப்போது புகார் அளித்த இளம் பெண்ணின் தம்பி மவுலி (23) என்பவர், "எனது அக்காவிடம் தவறாக நடக்க முயன்றாயா?" என ஆவேசமாக ஆடிட்டர் ராபர்ட்டின் தலையில் கையால் தாக்கினாராம். இதில் ஏற்கனவே உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ராபர்ட் நிலை தடுமாறி மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து ராபர்ட் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராபர்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மவுலியை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அக்காவிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டி போலீஸ் ஸ்டேசன் வாசலில் ஆடிட்டரை பெண்ணின் தம்பி அடித்தே கொன்ற சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications