பரிமளாவுடன் பழகக் கூடாது.. சித்தி போட்ட தடை.. தூக்கில் தொங்கிய இளைஞர்!
பல்லாவரம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
Recommended Video
சென்னை: பரிமளாவுடன் பழகவே கூடாது என்று சித்தி சொல்லிவிட்டதால், இளைஞர் மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் மனோஜ்குமார். இவருக்கு 25 வயதாகிறது. இவரது தாய்-தகப்பன் இல்லை. திருமணமும் செய்து கொள்ளவில்லை.

6 வருடத்திற்கு முன்பு பரிமளா என்ற பெண்ணுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பரிமளா கல்யாணம் ஆகி கணவனை இழந்தவர். 13 வயதில் சுவேதா என்ற பெண் குழந்தை இருக்கிறாள்.
ஆனால், பரிமளாவுடன் பேச, பழக கூடாது என்று மனோஜ்குமாரின் சித்தி மீனா அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் மனோஜ்குமார். மதியம் ஒரு மணி இருக்கும்.. திடீரென வீட்டுக்குள் நுழைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சென்று விட்டு பரிமளா வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனோஜ்குமார் தூக்கில் தொங்கியபடி கிடந்ததை கண்டு அலறினார்.
இதையடுத்து, தகவலறிந்து விரைந்து வந்த பம்மல் சங்கர் நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications