சென்னை கோயம்பேடு அருகே இளைஞர் தலையில் அடித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடு அருகே இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றம் ஏவிகே நகரில் அட்டை கம்பெனி ஒன்று உள்ளது. அதன் அருகே இளைஞர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

Youth killed in Chennai Koyambedu

விசாரணையில், நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித் (22) என்பதும் அவரது தலையில் பாட்டில் மற்றும் கற்களால் அடித்து கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ரஞ்சித் கடந்த ஆண்டு பூவிருந்தவல்லியில் பணியில் இருந்த அன்பழகன் என்ற போலீஸை அரிவாளால் வெட்டியவர். ரஞ்சித் கொலை தொடர்பாக அவரது நண்பர்கள் மாடா விக்கி, பேட்டை சுரேஷ், பலாக்கொட்டை கார்த்தி, மண்ட தினேஷ், ஹரிஹரசுதன், இஸ்ரேல் உள்ளிட்டோருக்கு சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+