கத்தியை காட்டி மிரட்டி.. டிரஸ் இல்லாமல் போட்டோ எடுத்து.. ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி.. இளைஞர் கைது
பேராசிரியைக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: கத்தி முனையில், பெண்ணை மிரட்டி டிரஸ் இல்லாமல் போட்டோ எடுத்துள்ளார் இளைஞர் ஒருவர். அத்துடன், தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும் மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் விவேஷ். சென்னை அம்பத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

பார்ட் டைம்-ஆக மாமல்லபுரம் அருகே உள்ள பிரிஸ்ட் பல்கலைகழகத்தில் பிசினஸ் எஜுகேஷன் பொறியியல் படித்து வந்தார்.
அதே பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இளம் பெண் ஒருவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நல்ல நண்பர்களாக கடந்த 6 மாதமாக பழகி வந்தனர். இந்நிலையில், தன் படிப்பு நிறைவு பெறுவதால், பார்ட்டி தருவதாக கூறி, கடந்த 19ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் பெண் பேராசிரியரை பைக்கில் வெளியே அழைத்து சென்றுள்ளார்.
பூஞ்சேரி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருள்சூழ்ந்த பகுதியில் திடீரென பைக்கை நிறுத்திவிட்டு, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. பிறகு கத்தி முனையில் ஆடையை கழற்றும்படி மிரட்டியுள்ளார். உயிருக்கு பயந்த உதவி பேராசிரியரும்ஆடையை கழற்றி உள்ளார்.
இதை விவேஷ் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இதையடுத்து, உதவி பேராசிராயரை தங்கியிருக்கும் மகளிர் விடுதியில் விட்டு சென்றுள்ளார். டிரஸ் இல்லாமல் போட்டோ எடுத்ததை வைத்து மிரட்டி தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவேஷ் குறித்து அந்த பெண் செம்மஞ்சேரி ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் விவேஷை கைது செய்து, விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, "அந்த பெண்ணுக்கென்று உறவு யாரும் இல்லை, அதனால் எப்படியும் இதை வெளியில் சொல்ல மாட்டார், புகார் சொல்ல மாட்டார் என்று நினைத்துதான் அப்படி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறினார். இதையடுத்து விவேஷை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications