போலீஸை கண்டதுமே 'யூ-டர்ன்' எடுத்த இளைஞர்கள்.. பின்னாடியே விரட்டி சென்று பார்த்தால்.. சென்னையில் ஷாக்
சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்
சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் திருட்டு பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்து விதி மீறல் குற்றங்கள் குறையும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர். இந்த சட்டத்தின்படி விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. உதாரணமாக இதற்கு முன்னர் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதமாக இருந்த நிலையில் புதிய சட்டத்தின் படி இது ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது.
அதேபோல சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த போலீஸார் 24/7 முறையில் ஆய்வு பணியில் களம் இறங்கினர். இதில் ஏராளமான திருட்டு வாகனங்கள் மீட்கப்பட்டன. அதேபோல போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களும் குறைந்தன.

பெரியமேடு
இப்படி இருக்கையில், திங்கட்கிழமையன்று சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பைக்குகளை மடக்கி விசாரிக்க முயன்றனர். ஆனால் போலீஸாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால் விடாத போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

பட்டா கத்தி
அதேபோல பைக்கில் பட்டா கத்தி, அருவா உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்துள்ளன. இதனையடுத்து மூவரையும் பெரியமேடு காவல் நிலைத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு வைத்து தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் சில நாட்களுக்கு முன்னர் மீஞ்சூரில் ஒருவரை கொலை செய்ததாகவும், எனவே எதிர் தரப்பினர் தங்களை எப்போது வேண்டுமானாலும் தாக்க கூடும் என்பதால் தற்காப்புக்காக ஆயுதங்களை கையில் வைத்து சுற்றிக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

பிளான்
இருப்பினும் இவர்கள் கூறியதில் சில விஷயங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் மூவரையும் தனித்தனியாக விசாரிக்க தொடங்கினர். இவ்வாறு விசாரிக்கையில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, இவர்கள் சென்னையில் தங்களுடைய எதிரி குரூப்பை சேர்ந்த ஒரு முக்கியமான நபரை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளனர். இதற்காக பைக்குகளை வெவ்வேறு பகுதிகளிலிருந்து திருடியுள்ளனர். இந்த பிளானுக்கு தலைமையாக ஆறுமுகம் ராஜா (23) என்பவர் செயல்பட்டுள்ளார்.

கைது
இதனையடுத்து அவருடன் வந்த மற்ற இரண்டு இளைஞர்கள் டில்லி பாபு (19), சத்திவேல் (19) ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சென்னையின் மையமாக இருக்கும் பெரியமேடு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இந்த ஒட்டு மொத்த பிளானுக்கும் மூளையாக உள்ள நபரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications