Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாஸ்டர்மைண்ட்".. கேமர் மதனுக்கு மனைவி கிருத்திகாவும் உடந்தையாக இருந்தது அம்பலம்.. அதிரடி கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுமிகளிடம் யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசியதாகவும், பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் கேமர் மதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளார். மதனின் யூடியூப் சேனலில் கிருத்திகாதான் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    3 நாளில் அடுத்தடுத்து சிக்கிய Youtubers.. தட்டி தூக்கிய போலீஸ்

    யூ டியூபில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளின் ட்ரிக்குகளை சொல்லி தருவதாக சேனல் நடத்தி வந்தவ யூ டியூப் கேமர் மதன் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். இவர் மீது 150க்கும் மேற்பட்ட பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    பெண்களிடம் தவறாக பேசுதல், வீடியோ எடுத்து மிரட்டுதல், பண மோசடி, இளம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, டெலிகிராமில் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்வது என்று பல்வேறு புகார்கள் கேமர் மதன் மீது வைக்கப்பட்டுள்ளது.

    கேமர் மதன்

    கேமர் மதன்

    கேமர் மதன் மீது பல்வேறு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார். நேற்று முதல்நாள் மாலைக்குள் இவர் போலீசில் சரணடைய வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டு இருந்த நிலையில், போலீசில் சரண் அடையாமல் தலைமறைவாகிவிட்டார். சிபிசிஐடி போலீசார் இவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

     மனைவி

    மனைவி

    இந்த நிலையில் முகத்தை மூட வெளியே காட்டாமல் சுற்றி வந்த கேமர் மதனின் வீட்டை கண்டுபிடித்த போலீசார், அவரின் மனைவி மற்றும் அப்பாவிடம் விசாரணை நடத்தினார்கள். நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை போலீசார் இரண்டு முறை, மொத்தம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

    வீடியோ

    வீடியோ

    மதன் எங்கே, இந்த சேனல் எப்படி இயங்கியது, சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் எப்படி கிடைத்தது, எவ்வளவு பண மோசடி செய்யப்பட்டது, உங்களுக்கு உடந்தையாக இருந்தது யார் என்றெல்லாம் விசாரணை நடத்தினார்கள். இந்த 12 மணி நேர சிபிசிஐடி விசாரணையில் மதன் நடத்தும் யூட்யூப் சேனலின் நிர்வாகி கிருத்திகா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மதன்

    மதன்

    இந்த தவறுகளை மதன்தான் செய்தார் என்றாலும் அவரின் மனைவி கிருத்திகாவும் உடன் இருந்திருக்கிறார். இவரும் இந்த தவறுகளை செய்ததில் ஒரு மாஸ்டர் மைன்ட் என்று கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியமாக அந்த யூ டியூப் கிருத்திகாவின் மெயில் ஐடியை வைத்துதான் உருவாக்கப்பட்டுள்ளது. இவருக்கு தெரிந்தே எல்லா பாலியல் குற்றங்களும் நடந்துள்ளது.

    விசாரணை

    விசாரணை

    இதையடுத்து கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். கிருத்திகாவை கைது செய்த நிலையில் மதனும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. மதன் சரண்டர் ஆக வாய்ப்புள்ளது என்கிறார்கள். மதனின் அப்பாவிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+