ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிய திருவிக நகர்.. சோகத்தில் வடசென்னை மக்கள்
சென்னை: சென்னையில் அதிகபட்சமாக திருவிக நகர் மண்டலத்தில் 259 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

அடையாறு
அதில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக திருவிக நகரில் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேனாம்பேட்டையில் 27 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 24 பேருக்கும், வளசரவாக்கத்தில் 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அது போல் திருவொற்றியூரில் 3 பேருக்கும், மணலியில் ஒருவருக்கு, அம்பத்தூரில் 6 பேருக்கும், அண்ணாநகரில் 5 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 19 பேருக்கும், அடையாரில் ஒருவருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

சோளிங்கநல்லூர்
மொத்த எண்ணிக்கை திருவிக நகரில் 259 பேர், ராயபுரத்தில் 216 பேர், தேனாம்பேட்டையில் 132 பேர், கோடம்பாக்கத்தில் 116 பேர், தண்டையார்பேட்டையில் 101 பேர், அண்ணாநகரில் 91 பேர், வளசரவாக்கத்தில் 60 பேர், திருவொற்றியூரில் 19 பேர், மணலியில் 3 பேர், மாதவரத்தில் 4 பேர் அம்பத்தூரில் 33 பேர், ஆலந்தூரில் 9 பேர், அடையாறில் 21 பேர், பெருங்குடியில் 9 பேர், சோளிங்கநல்லூரில் 3 பேர் என ஆனது.

ராயபுரம்
மேற்கொண்ட பட்டியல்களில் முதல் இடத்தில் இருந்த ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு திருவிக நகர் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதியில் நாள்தோறும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ளது. பல்வேறு வரலாறுகளை உள்ளடக்கிய வடசென்னை இது போன்று தொற்று நோய் பரவும் மண்டலமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி
தமிழகத்தின் தலைநகர் சென்னை என்று சொல்ல போய் தற்போது கொரோனா தொற்றின் தலைநகராக சென்னை மாறிவிட்டது. இது பெரும் கவலையை அளிக்கிறது. அது போல் டெல்லியும் கொரோனா பரவும் தலைநகராகவே மாறிவிட்டது. இதற்கு காரணம் மக்கள் தொகை பெருக்கம் என சொல்லப்படுகிறது. மேலும் அருகருகே உள்ள வீடுகளால் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இன்னும் சிலரோ பேசுவதால் என்னவாகிவிட போகிறது என்ற அறியாமையும் உள்ளது. எனவே சென்னையில் இயல்பு நிலை திரும்ப இன்னும் 6 மாத காலம் ஆகலாம் என சொல்லப்படுகிறது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications