நார்த் முதல் சவுத் வரை !- ஈஸ்ட் முதல் வெஸ்ட் வரை: எடப்பாடி பழனிசாமி ராக்ஸ்!
சென்னை: ஆறாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் பயங்கர பாப்புலாராகிவிட்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரைக்கும் ஆறு கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடிச்சிட்டாரு. அவரோட ரீச் பாத்தா 6வது கட்ட முடிவில் அனைத்து தரப்பு மக்களையும் தனது அறிவிப்புகளாகல் சூப்பரா கவர்ந்து இழுத்துட்டார். எங்க போனாலும், அவரோட பேச்ச கேட்க கூட்டம் கூடிட்டே இருக்கு. அறிவிப்புகள் எக்கசக்கமா வேற லெவேல்ல இருக்கு.
இது தவிர ஸ்டாலின் அட்டாக் வேற மனுஷன் தூள் கிளப்புறாரு. பிரச்சாரத்துல, இளசுகளிடமும் உங்க கோரிக்கைளும் நிறைவேற்றப்படும்னு சொன்னது ஹைலைட். முதல்வர் யார் கேட்டாலும் சிரிச்சிட்டே அவர்களின் கோரிக்கைகளை கேட்கிறார்.

பெரிய விஷயம்
அப்படியே டக்குனு ஒரு டீக்கடைக்குள புகுந்து டீ குடிப்பதும், விவசாயிகளை பாத்தா வண்டியிலிருந்து இறங்கி போய் வரப்புல நின்னு அவுங்களோட வேலை செய்யறதும், குழந்தைகளை பார்த்ததும் வாங்கி கொஞ்சறதும் அவருடைய பாப்புலாரிட்டையை பயங்கரமா தூக்கிவிட்டிருக்கு. அதுமட்டுமல்லாம, பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் வந்துட்டா, அவரே மைக்கல ரூட் கிளியர் பண்ணி விடறதெல்லாம் ஒரு சி.எம் பண்ணறது பெரிய விஷயம்.

புதிய முதலீடுகள்
விவசாயிகளை எடுத்திட்டா பயிர்க்கடன் தள்ளுபடி, பொதுமக்களை எடுத்திட்டா குறைகளை செல்போன் மூலம் சொல்ல 1100 என்ற திட்டம், மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா, மெடிக்கல் சீட்டு, இளைஞர்களுக்கு புதிய முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்பு, வீடு இல்லாதவங்களுக்கு கான்கிரீட் வீடுங்க, வயசானவங்களுக்கு ஊருக்குள்ளேயே அம்மா மினி கிளினிக்னு இப்படி முதல்வரின் அறிவிப்புகளை அடிக்கிட்டே போகலாம்.

சிஏஏ வழக்குகள் வாபஸ்
அதுவும் இன்னிக்கு, தென்காசியில செஞ்ச அறிவிப்பு பவுண்ட்ரினுதான் சொல்லனும். கொரோனா லாக்டவுன் கேஸ்கள் வாப்பஸ்னு சொல்லிட்டாரு. அதேபோல், சி.ஏ.ஏ போராட்டத்துல சிறுபான்மையினர்கள் மேல போட்ட கேஸ்கள் அனைத்தும் வாப்பஸ். ஏற்கனவே சிறுபான்மையினர் மக்கள் மத்தியில எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல வரவேற்பு.

தக்க வைத்த எடப்பாடியார்
தலையில குல்லா போடறது, குர்ரான் படிக்கும் போது பேச்சை நிப்பாட்டி அமைதியா இருக்கறது போன்ற விஷயம் எல்லாம் சிறுபான்மையினர் மத்தில செம ரீச். பா.ஜ.க கூட்டணியில இருக்கறதால சிறுபான்மையினர் ஒட்டு அ.தி.மு.கவுக்கு இல்லனு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா முதலமைச்சர் தனது அறிவிப்புகள் மூலமும், செயல்பாடுகள் மூலமும் சிறுபான்மை வாக்கு வங்கியை தக்க வெச்சிட்டிருக்காருனு அரசியல் விமர்சகர்கள் சொல்லறாங்க.

நூறு ஐபேக் வந்தாலும்
பிரச்சாரத்துல முதலமைச்சர் தனது சாதாரண அனுகுமுறையால செய்யறது எல்லாம் நூறு ஐபேக் வந்தாலும் ஸ்டாலினால செய்ய முடியாதுனு மக்கள் நினைக்கிறாங்க.












Click it and Unblock the Notifications